இன்றைய தமிழோசையில் முதலில் செய்தியறிக்கை பின்னர் தொடரும் செய்தியரங்கில்

இன்றுடன் கடந்த 76 ஆண்டுகளாக தமிழ் கூறும் நல்லுலகெங்கும் நேயர்களுக்கு செய்திகளை வழங்கி வந்த பிபிசி தமிழோசையின் சிற்றலை ஒலிபரப்பு நிறுத்தப்படும் நிலையில், இந்த நீண்ட கால கட்டத்தில் பிபிசி தமிழில் ஒலிபரப்பான முக்கிய நிகழ்ச்சிகளிலிருந்து சில ஒலிக்கீற்றுகள் அடங்கிய சிறப்புப் பெட்டகம்

மாறி வரும் தொழில் நுட்பம் மற்றும் அசுர வளர்ச்சி காணும் சமூக ஊடகங்கள் மத்தியில் வானொலியின் எதிர்காலம் பற்றிய ஒரு பேட்டி

ஆகியவை இன்றைய சிறப்பு அரை மணிநேர ஒலிபரப்பில் இடம்பெறுகின்றன