சசிகலா உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து முதலமைச்சராக முடியாதென்ற நிலை ஏற்பட்டபின்னர், அவரது ஆதரவாளராகக் கருதப்படும் எடப்பாடி பழனிச்சாமியை அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவராக்கினார். சசிகலாவின் தயவால் முதலமைச்சர் பதவிக்கு வந்திருக்கும் எடப்பாடி பழனிச்சாமி எந்த அளவு சுதந்திரமாகச் செயல்படுவார் என்று மூத்த ஊடகவியலாளரும், அரசியல் விமர்சகருமான கே.என்.அருணிடம் கேட்டார் மணிவண்ணன்