தமிழக அரசு பிறப்பித்த அவரச சட்டத்தின் படி, ஜல்லிக்கட்டு மதுரையில் நடத்தப்படும் என ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகர் தெரிவித்துள்ளார். சென்னை மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களிலும், குறிப்பாக மதுரையிலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் ஜல்லிக்கட்டு நடத்த நிரந்தர சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்று கோரி போராட்டத்தை கைவிட மறுத்துவிட்டனர்.