உத்தரப்பிரதேசத்தில் இன்னும் சில வாரங்களில் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் , ஆளும் சமாஜ்வாடி கட்சியில் ஏற்பட்ட குழப்பங்கள் அக்கட்சியின் வெற்றி வாய்ப்பைப் பாதிக்கும் என்று கூறப்பட்ட்து. ஆனால் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி பிரிவுக்கு, இந்த கட்சியின் பிரபலமான சைக்கிள் சின்னம் ஒதுக்கப்பட்டிருப்பது அவரது குழுவின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்குமா என்று உத்தரப்பிரதேச அரசியலைக் கூர்ந்து கவனித்து கட்டுரைகள் எழுதியவரும், ஊடகவியலாளருமான வித்யா சுப்ரமணியத்திடம் கேட்டார் மணிவண்ணன்