தமிழக அரசின் தலைமைச் செயலராக இருந்த ராம மோகன ராவ் வீட்டில் நடந்த வருமான வரிச் சோதனை குறித்து பிபிசி தமிழோசைக்கு பேட்டியளித்த அ.தி.மு.கவின் செய்தித் தொடர்பாளர் தீரன், மத்திய அரசின் இந்த நடவடிக்கை பாரபட்சமானது என்றும், தலைமை செயலகத்தில் துணை ராணுவத்தை அனுப்பியதுதான் ஏற்றுக் கொள்ளமுடியாதது என்றும் கூறியுள்ளார்.