இன்று நேற்று அல்ல, பல காலம் தொட்டே வேற்று கிரக வாசிகள் பற்றிய கோட்ப்பாடுகள் நிறைய காண கிடைக்கின்றன. அந்த கால கடவுள்கள் தொடங்கி எகிப்து பிரமிடுகள், நிலவின் இருண்ட மறுபக்கம் என வேற்று கிரக வாசிகளின் பங்கு நிறைய இருப்பதாக வேற்று கிரகவாசிகள் சதிக்கோட்பாட்டாளர்கள் நம்புகின்றனர். நம் அருகே மட்டுமில்லாமல், இந்த பிரபஞ்சத்தில் நம் சூரிய குடும்பத்திற்கு அருகாமையிலுள்ள மற்ற நட்சத்திர கூட்டங்களில் ஏகப்பட்ட விந்தையான நிகழ்வுகள் நடப்பதாகவும் நிறைய சதிக்கோட்பாட்டாளர்கள் நம்புகின்றனர்.
lநாம் வாழ்ந்து கொண்டிருக்கும் பூமியை உள்ளடக்கிய நமது சூரிய குடும்பத்தைப் போல பல சூரிய குடும்பங்கள் பிரபஞ்சத்தில் பரவிக் கிடக்கின்றன .இந்த பிரபஞ்சத்தில் லட்சோபலட்சம் நட்சத்திரங்களும் அதை சுற்றி கணக்கிலடங்கா கிரகங்களும் இருக்கின்றன .பிரபஞ்சத்தில் உயிரின வாழ்க்கை என்பது நம் பூமியில் மட்டும் தான் இருக்கமுடியும் என்று நினைப்பது சற்றும் பொருத்தம் இல்லாதது .பூமியில் இருந்து வெகு தொலைவில் உள்ள லட்சோபலட்சம் கிரகங்களில் சில நூறு கிரகங்களிலாவது உயிர் வாழ்க்கை அமையப் பெற்று இருக்கும் அவற்றுள் சிலவற்றில் உள்ள உயிரினங்கள் நம்மைவிட எல்லா நிலைகளிலும் மேம்பட்டு இருக்க வாய்ப்புள்ளது
வேற்று கிரகவாசிகள் உருவத்தில் எம்மை போல் இருக்கமாட்டார்கள் அவர்கள் எம்மை விட அதீத வளர்சி அடைந்த மனிதர்கள் .அவர்கள் ஒரு சிலரின் வரவால் தான் பூமியில் மனித குலம் தோன்றி இருக்கலாம் என்றவகையில் ஆராய்வாளர்கள் தங்கள் ஆய்வுகளை நகர்த்துகின்றார்கள்