உலகில் அனைத்து நன்மைகளையும் அடையும் வல்லமை மௌனத்துக்கு உண்டு. அதனால்தான் 'மௌனம் சர்வார்த்த சாதனம்' என்று கூறப்படுகிறது.மௌனம் ஒரு மகத்தான சக்தி!* ஒரு பேச்சு சொல்லாத எத்தனையோ விஷயங்களை, ஒரு மௌனம் சொல்லிவிடும்.

மௌனம் ஒரு மகத்தான சக்தி! மௌனத்தின் சக்தியை உணர்ந்தவர்கள், அதைத் தங்கள் வாழ்வில் பிரயோகித்து வெற்றி கண்டிருக்கிறார்கள்.

எதை, எப்போது பேச வேண்டும், எப்படிப் பேச வேண்டும் என்றெல்லாம் தெரிந்துவைத்திருப்பது அவசியம்தான். ஆனால், அதைவிட அவசியம், எப்போது பேசாமல் மௌனமாக இருக்கவேண்டும் என்று தெரிந்து வைத்திருப்பது.