இமாம் நவவியின் நாற்பது ஹதீஸ்களில் முதலாவது ஹதீஸின் விளக்கவுரை 

உமர் இப்ன் அல் ஹத்தாப் (ரழி) அறிவிக்கின்றார்கள் : "செயல்கள் அனைத்தும் எண்ணங்களை பொறுத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கப் பெரும். எவர் ஒருவரின் ஹிஜ்ரத் அல்லாஹ்விற்காகவும் அவனின் தூதருக்காகவும் செய்யப்படுமோ; அது அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்குமாகும். எவர் ஒருவரின் ஹிஜ்ரத் உலக தேவைகளுக்காகவோ, ஒரு பெண்ணை மணப்பதற்காவோ செய்யப்படுமோ, அவரின் ஹிஜ்ரத் அவர் தேவைகளுக்காக செய்யப் பட்டதாகும்."