என் காதலும் நீதானே
என் கடவுளும் நீதானே
என் கருவில் நான் சுமக்கும்
அந்த உயிரும் நீ தானே
யாரோநீ யாரோ யாரோ நீ யாரோ…
எனக்குள் நானே தேடிப் பார்த்தேன்
உனக்குள் என்னை தேடிப் பார்த்தேன்
எனக்குள் உன்னை தேடும் போதே
உன்னை நானும் பார்த்தேன்
தனிமை விரும்பி வாழ்ந்து பார்த்தேன்
உந்தன் பெயரை மறந்து பார்த்தேன்
உன்னை மறக்கும் போதே நானே
எந்தன் உயிரை மறந்தேன்
எனது வாழ்க்கை நீ தான் என்று
இந்த நிமிடம் மறந்தேன்
என்னுள்ளே நீ வந்த போதும்
ஒரு சொர்க்கம் நான் கண்டது
எனைத்தள்ளி நீ சென்ற போதும்
என் உயிரை யார் கொன்றது உயிரே….