நான் கேட்டது அழகிய நேரங்கள்,
யார் தந்தது விழிகளில் ஈரங்கள்...
நான் கேட்டது வானவில் மாயங்கள்,
யார் தந்தது வழிகளில் காயங்கள்......
இதயம் என்ற ஒன்று நமக்காக இயங்கிக் கொண்டிருந்தாலும்
அப்படி ஒன்று இருப்பதை நமக்கு உணர்த்துவதென்னவோ
நாம் நேசிக்கும் , நம்மை நேசிக்கும் நம் உறவுகளாளவே இருக்கிறது ......!