அறியப்படாத தமிழகம் - தவிடும் தத்தும் தொ. பரமசிவன் : அடித்தள மக்களின் அழிந்து வரும் பண்பாடுகளை காக்கவேண்டியதன் அவசியத்தைக் கூர்மையாக முன்வைப்பவர்.
வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான், மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்; கானில் வளரும் மரமெலாம் நான், காற்றும் புனலும் கடலுமே நான்
விண்ணில் தெரிகின்ற மீனெலாம் நான், வெட்ட வெளியின் விரிவெலாம் நான்; மண்ணில்கிடக்கும் புழுவெலாம் நான், வாரியினுள் உயிரெலாம் நான்,
கம்பனிசைத்த கவியெலாம் நான், காருகர் தீட்டும் உரவெலாம் நான்; இம்பர் வியக்கின்ற மாட கூடம் எழில்நகர் கோபுரம் யாவுமே நான்,
புதிய ஆத்திசூடி - நகர வருக்கம் / Puthiya Aathichudi - Nagara Varukkam
மகாகவி சுப்பிரமணிய பாரதியார் - புதிய ஆத்திசூடி
தன்மை இழவேல்
தாழ்ந்து நடவேல்
திருவினை வென்று வாழ்
தீயோர்க்கு அஞ்சேல்
துன்பம் மறந்திடு
தூற்றுதல் ஒழி
தெய்வம் நீ என்று உணர்
தேசத்தைக் காத்தல் செய்
தையலை உயர்வு செய்
இன்னாது என்றலும் இலமே, மின்னொடு வானம் தண் துளி தலைஇ ஆனாது கல் பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று நீர் வழிப்படூஉம் புணை போல, ஆருயிர் முறை வழிப்படூஉம் என்பது திறவோர் 10 காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.
புறநானூறு - 192 பாகம் - 3
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே
சாதல் என்பது புதிது இல்லை. வாழ்தல் இனிமையானது என்று நாம் மகிழ்வதும் இல்லை.