BBC Tamil Service broadcasts in Tamil to the tamil speaking audiences in Sri Lanka, India and other parts of the world where the Tamil diaspora are present.
The programme is available as an audio page in its website BBC Tamil (www.bbctamil.com)
நாடாளுமன்றத்தில் பேசிய அண்ணா, எட்டாவது அட்டவணையில் இடம் பெற்றுள்ள 14 மொழிகளும் (தற்போது இந்த அட்டவணையில் 22 மொழிகள் உள்ளன) ஆட்சி மொழியாக வேண்டும். அது நடக்கும் வரை ஆங்கிலமே இணைப்பு மொழியாக நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அவர் தமிழுக்கு மாற்றாக ஆங்கிலத்தை முன்னிறுத்தவில்லை. இந்திக்கு மாற்றாகவே ஆங்கிலத்தை முன்னிறுத்தினார். சமூக நீதி, மாநில சுயாட்சி, மொழியுரிமை இவையே அவரது அரசியல் என்றார் சுப.வீரபாண்டியன்.
கடந்த 76 ஆண்டுகளாக தமிழ் கூறும் நல்லுலகெங்கும் நேயர்களுக்கு செய்திகளை வழங்கி வந்த பிபிசி தமிழோசையின் சிற்றலை ஒலிபரப்பு நிறுத்தப்படும் நிலையில், இந்த நீண்ட கால கட்டத்தில் பிபிசி தமிழில் ஒலிபரப்பான முக்கிய நிகழ்ச்சிகளிலிருந்து சில ஒலிக்கீற்றுகள் அடங்கிய சிறப்புப் பெட்டகம் இது.
இன்றைய தமிழோசையில் முதலில் செய்தியறிக்கை பின்னர் தொடரும் செய்தியரங்கில்
இன்றுடன் கடந்த 76 ஆண்டுகளாக தமிழ் கூறும் நல்லுலகெங்கும் நேயர்களுக்கு செய்திகளை வழங்கி வந்த பிபிசி தமிழோசையின் சிற்றலை ஒலிபரப்பு நிறுத்தப்படும் நிலையில், இந்த நீண்ட கால கட்டத்தில் பிபிசி தமிழில் ஒலிபரப்பான முக்கிய நிகழ்ச்சிகளிலிருந்து சில ஒலிக்கீற்றுகள் அடங்கிய சிறப்புப் பெட்டகம்
மாறி வரும் தொழில் நுட்பம் மற்றும் அசுர வளர்ச்சி காணும் சமூக ஊடகங்கள் மத்தியில் வானொலியின் எதிர்காலம் பற்றிய ஒரு பேட்டி
ஆகியவை இன்றைய சிறப்பு அரை மணிநேர ஒலிபரப்பில் இடம்பெறுகின்றன
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் ஊழியர்கள் கொலையான விவகராம் குறித்த செய்தி 38 நாட்கள் நடந்த போராட்டத்தை அடுத்து, மன்னார் மாவட்டத்தில் மக்களுடைய காணிகள் கடற்படையினரால் கையளிக்கப்பட்டது குறித்த செய்தி உள்ளிட்டவை கேட்கலாம்
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில் மதுரை கீழடி அகழ்வு பணிகளை பார்வையிடவந்த மத்திய அமைச்சர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது குறித்த செய்தி
இலங்கை அம்பாரை மாவட்டத்தில் பௌத்த வழிபாட்டு மையம் அமைப்பதை எதிர்த்து கடையடைப்பு நடத்தப்பட்டது தொடர்பான செய்தி உள்ளிட்டவை கேட்கலாம்
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில் தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுத்த புகாரில் அதிமுகவின் துணை பொதுசெயலாளர் டிடிவி தினகரனை சென்னைக்கு அழைத்துவந்து விசாரணை நடத்தப்பட்டது குறித்த செய்தி காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு அரசு பொறுப்பு கூறவேண்டும் என கோரி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முழு கடையடைப்பு நடைபெற்றது குறித்த செய்தி உள்ளிட்டவை கேட்கலாம்
இன்றைய தமிழோசையில், அதிமுகவில் இரு அணிகளுக்கிடையே மீண்டும் சமரச பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் நடைபெறுவது தொடர்பான செய்தி இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதி யுத்தத்தில் ராணுவத் தளபதியாக இருந்த சரத் ஃபொன்சேகா மீண்டும் பாதுகாப்புத் துறையின் முக்கியப் பொறுப்பில் நியமிக்கப்படுவது தொடர்பான செய்தி மற்றும் நேயர்களின் கருத்துக்கள் ஆகியவை இடம் பெறும்.
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்
விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டம் குறித்த செய்தி
பிபிசி தமிழோசையின் சிற்றலை ஒலிபரப்பு நிறுத்தப்படுவது குறித்து தமிழோசையின் மூத்த நேயரின் கருத்து ஆகியவை கேட்கலாம்
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்
இலங்கை கிளிநொச்சியில் சிவில் பாதுகாப்புப் படைப்பிரிவினர் ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தியது குறித்த செய்தி
இலங்கை போலிசாரின் சீருடையில் மாற்றங்களை கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளது குறித்த செய்தி ஆகியவை கேட்கலாம்
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்
தமிழக விவசாயிகளின் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவது குறித்த செய்தி
போராட்டம் நடத்தி வந்த தமிழக விவசாயிகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்த கருத்து ஆகியவை கேட்கலாம்
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்
வைகை அணையின் நீர்மட்டத்தை தெர்மோகோல் அட்டைகளால் மூடி நீர் ஆவியாவதைத் தடுக்கும் முயற்சி குறித்த செய்தி
டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட திமுகவின் செயல் தலைவர் மு. க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்தது குறித்த செய்தி ஆகியவை கேட்கலாம்
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில் பிரான்சில் அதிபர் தேர்தலில் முதல் சுற்றில் 11 வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ள நிலையில் அங்கு நிலவும் அரசியல் சூழல் தொடர்பான பேட்டி இலங்கை குப்பைமேடு சரிந்த விபத்தை அடுத்து, உள்ளூராட்சி சபைகளிலும் கழிவுகளை அகற்றும் பணி மேற்கொள்ளவது குறித்து ஜனாதிபதி அறிவிப்பு உள்ளிட்டவை கேட்கலாம்
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில் அ.தி.மு.கவின் இரு அணிகளும் ஒன்றாக இணைவதில் இழுபறி நீடிப்பது குறித்த செய்தி இலங்கை மீதொட்டமுல்ல பகுதி குப்பை மேடு சரிந்த விபத்தில், பலியானவர்களின் உடல்களை எடுத்துசெல்ல தரக்குறைவான சவப்பெட்டிகள் பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு உள்ளிட்டவை கேட்கலாம்
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில் அ.தி.மு.க. அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கட்சியிலிருந்து தான் ஒதுங்கிவிட்டதாக தெரிவித்துள்ளது குறித்த செய்தி இலங்கை மீத்தொட்டேமுல்ல பகுதியில் குப்பை மேடு சரிந்த இடத்தில் மீட்புபணிகள் 72 மணிநேரத்திற்குள் முடிவுக்குவரும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளது குறித்த செய்தி உள்ளிட்டவை கேட்கலாம்
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில் சசிகலா குடும்பத்தினர் அ.தி.மு.கவில் இருக்கும்வரை இணைப்போ பேச்சுவார்த்தைகளோ சாத்தியமில்லை என ஓபி எஸ் அறிவித்துள்ளது குறித்த செய்தி கொழும்புக்கு அருகே மீத்தொட்டமுல்ல பகுதியில் குப்பை மேடு சரிந்ததில் பலியானவர்களின் எண்ணிக்கை முப்பதாக உயர்ந்துள்ளது குறித்த செய்தி உள்ளிட்டவை கேட்கலாம்
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்
டி.டி.வி.தினகரன் அணியினருக்கு இரட்டை இலை சின்னத்தை பெற்று தர லஞ்சம் வாங்கியதாக சுகேஷ் சந்திரசேகர் என்பவர் கைது செய்யப்பட்டது குறித்த செய்தி
அதிமுகவின் இரு அணிகளும் இணையும் சூழல் உள்ளதா என்பது குறித்து அதிமுகவின் செய்தித்தொடர்பாளர் வைகைச்செல்வன் அளித்த பேட்டி ஆகியவை கேட்கலாம்
பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (16.04.2017)
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்
சென்னையில் இன்று நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து மு.க. ஸ்டாலின் தெரிவித்த கருத்து
வடகொரியாவின் ஏவுகணை முயற்சி தோல்வி குறித்த செய்தி ஆகியவை கேட்கலாம்
இன்றைய தமிழோசையில், இலங்கை தலைநகர் கொழும்பு அருகே குப்பைமேடு சரிந்து குடியிருப்புப் பகுதிகளை மூடியதால் ஏற்பட்ட விபத்தில் பலர் உயிரிழந்தது குறித்த செய்தி
தமிழகத்தில் பிற சமூகத்தினர் வசிக்கும் பகுதிகளில் அம்பேத்கர் பிறந்த நாள் கொண்டாட காவல்துறை கட்டுப்பாடு விதிதத்தால் சர்ச்சை
மற்றும் நேயர் நேரம் ஆகியவை கேட்கலாம்.
இன்றைய செய்தியரங்கில் கடந்த வாரம் தமிழக அமைச்சரின் இல்லத்தில் நடந்த வருமானவரி சோதனையின்போது, மூன்று அதிமுக அமைச்சர்கள் அத்துமீறி நுழைந்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறித்த செய்தி இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் புத்தாண்டு தினம் கரிநாளாக கடைபிடிக்கப்பட்டுள்ளது குறித்த செய்தி உள்ளிட்டவை கேட்கலாம்
இன்றைய செய்தியரங்கில் கடந்த வாரம் தமிழக அமைச்சரின் இல்லத்தில் நடந்த வருமானவரி சோதனையின்போது, மூன்று அதிமுக அமைச்சர்கள் அத்துமீறி நுழைந்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறித்த செய்தி
இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் புத்தாண்டு தினம் கரிநாளாக கடைபிடிக்கப்பட்டுள்ளது குறித்த செய்தி உள்ளிட்டவை கேட்கலாம்
இன்றைய தமிழோசையில், தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை அதிகரித்து வருவது குறித்து உச்ச நீதிமன்றம் கவலை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இலங்கையில் எச்1 என்1 வைரஸ் பரவி வரும் நிலையில், அதற்குத் தேவையான டாமிஃப்ளூ மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் செய்தி ஆகியவை கேட்கலாம்.
சென்னை ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்ததாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து தற்போதுள்ள அதிமுக அரசை கலைக்க வேண்டும் என்று கோரி ஆளுநரிடம் திமுக பிரதிநிதிகள் மனுகொடுத்தது குறித்த பேட்டி முல்லைத்தீவில் ராணுவத்தினர் நிலைகொண்டுள்ள பிரதேசத்தில் இருந்து 399 ஏக்கர் காணிகளைக் கையளிப்பதற்கு ராணுவத் தளபதி முன்வந்துள்ளது குறித்த செய்தி உள்ளிட்டவை கேட்கலாம்
புதுடெல்லியில், கடந்த 29 நாட்களாக போராட்டம் நடத்திவரும் விவசாயிகள் இன்று மண்சோறு உண்டு போராட்டம் நடத்தியது குறித்த பேட்டி இலங்கையில் தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில், புதிய மாணவ, மாணவியர் உள்ளாடை அணியத் தடை விதித்து, ராக்கிங் குற்றச்சாட்டில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள் வகுப்புக்களில் பங்கேற்க கடை விதிக்கப்பட்டிருப்பது குறித்த செய்தி உள்ளிட்டவை கேட்கலாம்
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்
ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெறவிருந்த இடைத்தேர்தலை, தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது தொடர்பாக, அதிமுக (அம்மா) அணியின் வேட்பாளரான டி.டி.வி.தினகரன் தெரிவித்த கருத்து
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து குறித்து மூத்த பத்திரிகையாளர் என்.ராம் அளித்த பேட்டி ஆகியவை கேட்கலாம்
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்
சென்னை அண்ணா சாலையில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே ஏற்பட்ட திடீர் பள்ளம் குறித்த செய்தி
விவசாயிகளின் பிரச்சனை குறித்து இயக்குநர் தங்கர்பச்சான் அளித்த பேட்டி ஆகியவை கேட்கலாம்
இன்றைய தமிழோசையில்
ஏப்ரல் 12-ஆம் தேதி தேர்தலைச் சந்திக்கும் சென்னை ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் உச்சகட்ட பிரசாரம் நடைபெற்று வரும் நிலையில், தொகுதி நிலவரம் குறித்து ஓர் ஆய்வு
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் இஸ்லாமிய வழிபாட்டு தலமொன்றில் வழங்கப்பட்ட உணவு நஞ்சானதாக கூறப்படும் சம்பவத்தில் நான்கு பேர் உயிரிழந்த நிலையில் இன்றைய நிலவரம் தொடர்பான செய்தி
மற்றும் நேயர் நேரம் ஆகியவை கேட்கலாம்.
நடிகர் ரஜினி ஏப்ரல் 12ம் தேதி முதல் 16ம் தேதி வரை ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொள்ளவதற்காக ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நிகழ்ச்சி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் ரஜினி தனது ரசிகர்களுக்கு விளக்கத்தை ஒரு ஒலிப்பதிவாக வெளியிட்டுள்ளனர்.
தமிழக சுகாதார அமைச்சர் இல்லம் உட்பட 30க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று வருமானவரித்துறை சோதனை நடத்தியுள்ளது குறித்த செய்தி இலங்கையில் இஸ்லாமிய வழிபாட்டுத் தலமொன்றில் வழங்கபட்ட கந்தூரி உணவு விஷமானதில் 3 பேர் உயிரிழந்துள்ளது குறித்த செய்தி உள்ளிட்டவை கேட்கலாம்
சென்னை ஆர் கே நகரில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலுக்கான பிரசாரத்தில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சடலத்தைப் போன்ற பொம்மையை வைத்து ஓ பி எஸ் அணி பிரசாரம் செய்தது தொடர்பான செய்தி
இலங்கை நாடாளுமன்றத்தில் ஐநா மன்றத்தில் வைக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்த விவாதத்தின் போது கடும் அமளி ஏற்பட்டது குறித்த செய்தி
உள்ளிட்ட செய்திகளை கேட்கலாம்
தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ஜல்லிக்கட்டு கலவரம் குறித்து முறையான சாட்சியம் அளிக்க பொதுமக்கள் முன்வர வேண்டும் என விசாரணை ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது குறித்த செய்தி இலங்கையில் அரச சார்பு துறை நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களில் பெயர் பலகைகளை தமிழ் , சிங்களம் இரு மொழிகளில் வைக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது குறித்த செய்தி உள்ளிட்டவை கேட்கலாம்
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்
தமிழகத்தில் சில தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மைல் கற்களில், ஊர் பெயர்கள் இந்தியில் எழுதப்பட்டது குறித்து மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்த கருத்து
பொன். ராதாகிருஷ்ணனின் கருத்து தொடர்பாக மூத்த அரசியல் தலைவரும், திமுகவைச் சேர்ந்தவருமான பழ.கருப்பையா அளித்த பேட்டி ஆகியவை கேட்கலாம்
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய மு.க.ஸ்டாலின் தெரிவித்த கருத்து
5 நாட்களாக தொடர்ந்து வந்த லாரிகளின் வேலை நிறுத்தம் தமிழகத்தில்வாபஸ் பெறப்படுவது குறித்த செய்தி ஆகியவை கேட்கலாம்
புதுடெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக டெல்லியில் உள்ள தமிழக இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது தொடர்பான செய்தி
நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்படும் வேளையில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு மாற்றுவேலை அளிக்கவில்லை என தொழிலாளர்கள் குற்றச்சாட்டு. உள்ளிட்ட செய்திகளை கேட்கலாம்
இன்றைய தமிழோசையில், தேசிய நெடுஞ்சாலைகளை ஒட்டியுள்ள மதுக்கடைகளை மூட இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, தமிழகத்தில் ஏற்படும் தாக்கம் குறித்த செய்தி இலங்கையில் சுமார் 8 இலட்சம் பேர் மன அழுத்த நோய்க்கு உள்ளாகியிருப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறும் நிலையில், அதற்காந காரணம் குறித்த ஆய்வு மற்றும் நேயர் நேரம் ஆகியவை கேட்கலாம்.
மலேசியப் பிரதமர் நஸீப் ரஸாக், நடிகர் ரஜினிகாந்தை சந்தித்துப் பேசியுள்ளது குறித்த செய்தி மற்றும் பேட்டி
தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் வரை மதுக்கடைகள் இருக்கக் கூடாது என்ற உச்ச நீதிமன்ற உத்தரவு குறித்த செய்தி உள்ளிட்ட செய்திகளை கேட்கலாம்
இன்றைய தமிழோசையில், டெல்லியில் கடந்த 17 நாட்களாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக, சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது குறித்த செய்தி
இலங்கையில் மன்னார் முசலி பிரதேசத்தில் முஸ்லிம்களின் பூர்விக இடங்களை வில்பத்து வனப்பகுதி எல்லையாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து நடைபெறும் போராட்டம் குறித்து ரிசாத் பதியுதீன் பேட்டி
ஆகியவை கேட்கலாம்.
தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் வரை மதுக்கடைகள் இருக்கக் கூடாது என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை தளர்த்த கோரி தமிழக அரசின் அளித்துள்ள சீராய்வு மனு தொடர்பான செய்தி
இலங்கையில் 3ம் தரப்பின் கவனக்குறைவால் மரணமடைகின்ற குழந்தைகளின் பெற்றோருக்கு இழப்பீடு அளிப்பது தொடர்பான சட்டத்தை உருவாக்க நீதி அமைச்சின் ஆலோசனைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது குறித்த பேட்டி உள்ளிட்ட செய்திகளை கேட்கலாம்
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் நடக்கவுள்ள இடைத்தேர்தலில் அதிமுகவின் இரண்டு அணியினரும் பெருமளவில் பணப்பட்டுவாடா செய்வதாக திமுக குற்றச்சாட்டு இலங்கையில் டெங்கு காய்ச்சலுக்கு 25,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது குறித்த செய்தி உள்ளிட்ட செய்திகளை கேட்கலாம்
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக ( புரட்சி தலைவி அம்மா) அணியின் வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்த கருத்து
நெடுவாசல் போராட்டக் குழுவின் அடுத்த கட்ட நடவடிக்கைள் குறித்தும் அதன் தலைவர் வேலு அளித்த பேட்டி ஆகியவை கேட்கலாம்
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்
தமிழக அரசியல் தலைவர்கள் சிலர் ஆதாயம் தேட முயல்வதாக லைகா நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அளித்த பேட்டி
இலங்கை திருகோணமலை மாவட்டத்தில் H1N1 வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக கூறப்படுவது குறித்த செய்தி ஆகியவை கேட்கலாம்
மத்திய அரசு நடத்தும் மருத்துவபடிப்பிற்கான நீட் எனப்படும் பொது தேர்வு தொடர்பாக தமிழகத்தில் தொடரும் குழப்பங்கள்
இலங்கை அரசு, போர் குற்றங்களை விசாரிக்கவும் நல்லிணக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஐநா மன்றம் மேலும் இரண்டு ஆண்டு அவகாசம் அளித்திருப்பது குறித்த ஓர் ஆய்வு
ஆகியவை கேட்கலாம்
மத்திய அரசு நடத்தும் மருத்துவபடிப்பிற்கான நீட் எனப்படும் பொது தேர்வு தொடர்பாக தமிழகத்தில் தொடரும் குழப்பங்கள்
இலங்கை அரசு, போர் குற்றங்களை விசாரிக்கவும் நல்லிணக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஐநா மன்றம் மேலும் இரண்டு ஆண்டு அவகாசம் அளித்திருப்பது குறித்த ஓர் ஆய்வு
ஆகியவை கேட்கலாம்
லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் பாலத்தில் நடந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐஸ்ஐஸ் பொறுப்பேற்றுள்ளது குறித்த செய்தி
இலங்கை போர்குற்ற விசாரணைக்கு மேலும் இரண்டு ஆண்டு கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது குறித்த பேட்டி
மற்றும் தமிழக செய்திகளை கேட்கலாம்
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்
கட்சி சின்னத்தின் உரிமை கோரி அதிமுகவின் இரு அணிகளும் தேர்தல் ஆணையம் முன்பு தங்கள் தரப்பு வாதத்தை எடுத்துரைத்தது குறித்த செய்தி
லண்டனிலுள்ள பிரிட்டிஷ் நாடாளுமன்ற வளாகத்தில் துப்பாக்கி சூடு நடந்தது குறித்த செய்தி ஆகியவை கேட்கலாம்
ராமர் கோயில் - பாபர் மசூதி தொடர்பான வழக்கில், இருதரப்பும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனையைத் தீர்க்க உச்சநீதிமன்றம் அறிவுரை கூறியுள்ளது குறித்த பேட்டி
இலங்கை கம்பஹா மாவட்டத்தில் எச் ஐ வி தொற்று கொண்ட தாயின் குழந்தைக்கு கல்வி மறுக்கப்பட்டுள்ளது குறித்த செய்தி ஆகியவை கேட்கலாம்
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்
கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது தொடர்பாக இன்று தமிழக சட்டப்பேரவையில் நடந்த விவாதம் குறித்த செய்தி
தமிழக மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் குறித்து சட்டப்பேரவையில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்த கருத்து ஆகியவை கேட்கலாம்
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்
தான் இசையமைத்த பாடல்களை அனுமதியின்றி கச்சேரிகளில் பாடக்கூடாது என்று பாடகர் எஸ்.பி.பிக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறித்த செய்தி
ஆர்.கே. நகர் சட்டமன்ற இடைத் தேர்தலில், தங்கள் யாரையும் ஆதரிக்கவில்லை என்று என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியும் , இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் அறிவித்துள்ளது குறித்த செய்தி ஆகியவை கேட்கலாம்
வகுப்புவாத கட்சிகளின் வளர்ச்சி மற்றும் அவற்றின் செல்பாடுகளை எதிர்கொள்ள இன்றைய சூழலில் என்ன நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்று விவாதித்ததில் மக்கள் நலக் கூட்டணியில் கருத்தொற்றுமை ஏற்படவில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்திருக்கிறார்.
பிபிசி தமிழோசைக்கு பேட்டியளித்த முத்தரசன் இவ்வாறு கூறியிருக்கிறார்,
தமிழ் நாட்டில் மாற்று அரசியலை முன்னெடுக்கவே ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
இன்றைய தமிழோசையில், சென்னை ஆர்.கே. நகர் தொகுதி இடைத் தேர்தலில், மக்கள் நலக்கூட்டணியில் இடம் பெற்றிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னிச்சையாக வேட்பாளரை அறிவித்திருக்கிறது. இதனால், மக்கள் நலக்கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது குறித்த செய்தி அதிமுகவில் இரு அணிகள் ஏற்பட்டுள்ள நிலையில், ஆர்.கே. நகர் தொகுதி இடைத் தேர்தலில் இரட்டை இலைச் சின்னம் எந்த அணிக்குக் கிடைக்கும் என்பது குறித்த பேட்டி ஆகியவை கேட்கலாம்.
புதுதில்லியில் வறட்சி நிவாரணம் கோரி, மண்டைஓடுகளுடன் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள் தொடர்பான செய்தி
சோமாலிய கடற்கொள்ளையர்களின் பிடியில் சிக்கிய 13 இலங்கையர்கள் விடுவிக்கப்பட்டுள்ளது குறித்த செய்தி ஆகியவை கேட்கலாம்
தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்ட்ட பட்ஜெட் குறித்த செய்தி மற்றும் பேட்டி இலங்கையில் போர் குற்றங்களை விசாரிக்க வெளிநாட்டு நீதிபதிகள் நியமிக்கப்படுவது குறித்த சர்ச்சை தொடர்பான செய்தி ஆகியவை கேட்கலாம்
புதுடெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்து வந்த தமிழக மாணவர் முத்துகிருஷ்ணனின் உடல் பிரதே பரிசோதனைக்கு பிறகு அவரது தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது குறித்த செய்தி
இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்தில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல் மரணங்கள் குறித்து மாகாண சுகாதார அமைச்சரின் பேட்டி ஆகியவை கேட்கலாம்
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்
மரணமடைந்த ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவரான முத்துக்கிருஷ்ணனின் நண்பரும், அப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மாணவருமான விஜய் அமர்தராஜ் அளித்த பேட்டி
இலங்கை திருகோணமலை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்து வருவது குறித்த செய்தி ஆகியவை கேட்கலாம்
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்து வந்த தலித் மாணவரான முத்துகிருஷ்ணன் (எ) ரஜினி கிருஷ் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில், பிபிசி தமிழோசையிடம் உரையாடிய அவரது தந்தை ஜீவானந்தம், தற்கொலை செய்யுமளவு தன் மகன் கோழையல்ல என்றும், தன் மகனின் சாவில் மர்மம் உள்ளதென்றும் தெரிவித்தார்.
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்
தமிழகத்தில் நியாயவிலை கடைகளில் சில அத்தியாவசிய பொருட்களின் விநியோகத்தில் பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாகக் திமுகவின் ஆர்ப்பாட்டம் நடத்தியது குறித்த செய்தி
திமுகவினரின் குற்றச்சாட்டுகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அளித்த பதில் ஆகியவை கேட்கலாம்
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்
ஃ பிரிட்ஜோ என்ற மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டதைக் கண்டித்து நடைபெற்று வரும் போராட்டம் குறித்து ராமேஸ்வரம் மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் தேவதாஸ் அளித்த பேட்டி
இலங்கையில் தடைசெய்யப்பட்ட முறைகளில் மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு தண்டனை விதிக்கும் சட்டமூலம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்து ஆகியவை கேட்கலாம்
இன்றைய தமிழோசையில், இந்தியாவின் ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியான நிலையில், மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கட்சி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் கருத்து, இந்த வெற்றிக்கான காரணம் குறித்த ஓர் ஆய்வு ஆகியவை கேட்கலாம்.
அனைத்து கட்சிகளும் ஒன்றாக வந்து இணைந்து தேர்தலை சந்தித்தால்தான் பாரதீய கட்சியை வீழ்த்த முடியும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் ஐயர் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச தேர்தல் முடிவுகள், மோடி அலை தொடர்வதைத்தான் காட்டுகிறது என்று மூத்த பத்திரிகையாளர் என். ராம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, பிபிசி தமிழுக்கு பேட்டியளித்த ராம், மோடிக்கான ஆதரவு தொடர்வதற்கான காரணங்களைப் பட்டியலிட்டார்.
தவறு செய்ததுவிட்டு தலித் பிறப்பை துருப்புச் சீட்டாகப் பயன்படுத்துவது அநாகரிகம் என்று கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் செயலுக்கு, நீதிபதி சந்துரு கண்டனம் தெரிவித்துள்ளார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்காக, கர்ணனுக்கு உச்சநீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்றைய தமிழோசையில், கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த செய்தி. இந்த உத்தரவு குறித்து, ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு அவர்களின் பேட்டி ஆகியவை கேட்கலாம்.
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்
புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சையின் போது ஏற்பட்ட மின்தடையால் மூன்று பேர் உயிரிழந்துள்ளது குறித்த செய்தி
உத்தரப்பிரதேச மாநில முதல்வரும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் பிபிசிக்கு அளித்துள்ள பேட்டி ஆகியவை கேட்கலாம்
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை கோரி ஓ. பன்னீர்செல்வம் அணியினர் உண்ணாவிரதம் இருந்தது குறித்த செய்தி
நீதி விசாரணை கோரிய ஓபிஎஸ் அணியை சேர்ந்தவரும், முன்னாள் அமைச்சருமான மாஃபா பாண்டியராஜன் அளித்த பேட்டி ஆகியவை கேட்கலாம்
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்
ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர் பிரிட்ஜோ சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்த கருத்து
மீனவர் பிரிட்ஜோ சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து தேசிய மீனவர் பேரவை தலைவரான இளங்கோ அளித்த பேட்டி ஆகியவை கேட்கலாம்
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சைகள் குறித்து புதுதில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் மருத்துவ அறிக்கை மற்றும் சென்னை அப்போலோ மருத்துவமனையின் மருத்துவ அறிக்கைகள் குறித்த செய்தி
நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிரான போராட்டம் தொடங்கப்பட்டு 19 ஆவது நாளாக நிலையில் அது தொடரும் நெடுவாசல் போராட்டக்குழு தலைவரான வேலு அளித்த பேட்டி ஆகியவை கேட்கலாம்
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்
மனித உரிமைகள் தொடர்பான ஐ.நாவின் புதிய அறிக்கையை இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேன நிராகரித்துள்ளது குறித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்த கருத்து
தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் திடீர் விலை உயர்வு குறித்த செய்தி ஆகியவை கேட்கலாம்
சமீபத்தில் திமுகவில் இணைந்த நடிகர் ராதா ரவி அரசியல் தலைவர்களை பற்றி விமர்சிக்கும்போது மாற்றுத்திறனாளிகளுடன் ஒப்பிட்டு பேசிய பேச்சு சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது.
இந்நிலையில், தான் எப்படிப்பட்ட சூழ்நிலையில் அவ்வாறு பேசினார் என்பது குறித்து பிபிசி தமிழுக்கு ராதா ரவி அளித்த பேட்டி.
இன்றைய தமிழோசையில், இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பாக, ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறதா என்பது குறித்து மனித உரிமை ஆணையரின் அறிக்கை குறித்த செய்தி
தமிழகத்தின் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடைபெறும் நிலையில், மத்திய அரசு நிறுவன அதிகாரி விளக்கம் உள்ளிட்ட செய்திகளைக் கேட்கலாம்.
விவசாயிகள் தற்கொலையைத் தடுக்க அரசு என்ன செய்ய வேண்டும்? காவிரி டெல்டா விவசாயிகள் பாதுகாப்புக் குழுத் தலைவர் மன்னார்குடி ரங்கநாதன் பேட்டி
இந்தியாவில் விவசாயிகள் தற்கொலை அதிகரிப்பது குறித்து கவலை வெளியிட்டுள்ள உச்சநீதிமன்றம், இழப்பீடு கொடுப்பதில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக, அந்தத் தற்கொலைகளைத் தடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று அரசுக்கு அறிவுரை கூறியிருப்பது குறித்த செய்தி.
இலங்கையில் மலையக பெருந்தோட்ட பள்ளிக் கூட ஆசிரியர்களுக்கு இந்தியா, மலேசிய நாடுகளின் நிபுணர்கள் சிறப்புப் பயிற்சி ஆகியவை கேட்கலாம்
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்
இலங்கை கேப்பாப்பிலவு காணிகளையும் கையளிக்க வேண்டும் எனக் கோரி நடைபெறும் போராட்டம் குறித்த செய்தி
கோகோ கோலா மற்றும் பெப்ஸி குளிர்பான நிறுவனங்கள் தாமிரபரணி ஆற்றிலிருந்து தண்ணீர் எடுக்கலாம் என்று நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது குறித்த செய்தி ஆகியவை கேட்கலாம்
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்
தமிழகத்தில் இன்று முதல் அமலுக்கு வந்த பெப்ஸி மற்றும் கோகோ கோலா விற்பனை தடை குறித்த செய்தி
தேசத்துரோகிகள் என்று அறிவிக்கப்பட்ட இலங்கை போராளிகளை ஜனாதிபதி சிறிசேன தேசப்பற்றுள்ளவர்கள் என்று பிரகடனம் செய்துள்ளது குறித்த செய்தி ஆகியவை கேட்கலாம்
முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாப்பிலவு மற்றும் புதுக்குடியிருப்பு பகுதிகளில் ராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பதற்கு நேற்று மாலையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமாகிய இரா.சம்பந்தன் தலைமையிலான குழு ஜனாதிபதியை சந்தித்துள்ள வேளையில், இந்த சந்திப்பின் நோக்கம் மற்றும் எதிர்பார்ப்பு குறித்து பிபிசி தமிழோசையிடம் இரா. சம்பந்தன் எடுத்துரைத்தார்.
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்
ஹைட்ரோ கார்பன் திட்ட ஆய்வால், விவசாயம், நிலத்தடி நீருக்கு பாதிப்பு உள்ளதா என்பது தொடர்பாக நிலவியல் பிரிவு பேராசிரியர் இளங்கோ அளித்த பேட்டி
இலங்கை கேப்பாப்பிலவு காணிகள் விடுவிப்பு தொடர்பாக ஜனாதிபதியை சந்தித்தது தொடர்பாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அளித்த பேட்டி ஆகியவை கேட்கலாம்
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்
இலங்கையில் சிறை கைதிகள் ஏற்றிச்சென்ற சென்ற வாகனமொன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்த செய்தி
இன்று பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்த கருத்து ஆகியவை கேட்கலாம்
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்
ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடந்து வரும் வேளையில், இது குறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தை சேர்ந்த சேதுராமன் தெரிவித்த கருத்து
இலங்கையின் உள் விவகாரங்களில் வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிப்பது தொடர்பாக சிறிசேன தெரிவித்த கருத்து ஆகியவை கேட்கலாம்
இன்றைய தமிழோசையில், மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பெயரில் உள்ள திட்டங்களின் பெயர்களை மாற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கோரிக்கை, அது ஏற்கக்கூடியதா என்பது குறித்து முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி கருத்து மற்றும் நேயர் நேயரம் ஆகியவை கேட்கலாம்.
தமிழகத்தில் கோவை மாவட்ட எல்லையில் மலையடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மைய விழாவில், கடும் எதிர்ப்பையும் மீறி பிரதமர் மோடி பங்கேற்றது குறித்த செய்தி மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உறவினர் தீபா, புதிய அமைப்பைத் துவக்கியிருப்பது குறித்த செய்தி ஆகியவை கேட்கலாம்.
இன்றைய தமிழோசையில், தமிழக சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிச்சாமி அரசு நம்பிக்கை வாக்கு கோரி நடத்திய வாக்கெடுப்பு சட்ட விதிகளுக்கு முரணானது என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் புகார், இலங்கையில் அரச காணி அபகரிப்பு தொடர்பாக நடவடிக்கை எடுத்த அரசு அதிகாரி ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில், அரசு அதிகாரிகளின் பாதுகாப்புக் குறித்த கவலை
ஆகியவை கேட்கலாம்.
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில் 2013-ஆம் ஆண்டு தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தருமபுரி தலித் இளைஞர் இளவரசனின் மரணம், தற்கொலை என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது குறித்த செய்தி தமிழ் தேசியக் கூட்டமைப்பினரைச் சந்தித்த இந்திய வெளியுறவுச் செயலர் வடக்கு – கிழக்கு மாகாணங்களை இணைப்பது தொடர்பாக இந்திய வலியறுத்தாது என்று தெரிவித்திருப்பது குறித்த பேட்டி உள்ளிட்ட செய்திகளை கேட்கலாம்
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்
கடந்த சனிக்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தனது முதல் உத்தரவாக கூடுதலாக 500 டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுவதற்கு உத்தரவிட்டுள்ளது குறித்த செய்தி மற்றும் பேட்டி
இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் ராணுவத்தினால் விடுவிக்கப்பட்ட காணியொன்றில் மனித எச்சங்கள் கிடைத்துள்ளதாக எழுந்த சந்தேகத்தை அடுத்து இன்று அந்த இடத்தில் தொடங்கப்பட்ட அகழ்வு பணிகள் குறித்த செய்தி உள்ளிட்ட செய்திகளை கேட்கலாம்
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில் தமிழக சட்டசபையில் நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பின் போது நடந்த மோதல் குறித்து மக்களின் கருத்துக்கள் இலங்கையின் பேருவளை கடற்பகுதியில் பயணித்த படகொன்றில் ஏற்பட்ட விபத்து காரணமாக 11 பேர் வரை இறந்துள்ளது குறித்த செய்தி நேயர் நேரம் ஆகியவை கேட்கலாம்
இன்றைய தமிழோசையில், முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கத்தில், கடும் அமளியை அடுத்து தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபித்தது பற்றிய செய்திக்குறிப்பு தமிழக சட்டமன்றத்தில் நடந்த வன்முறைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளது குறித்த செய்தி ஆகியவை கேட்கலாம்
சட்டப்பேரவையில் நடந்த வாக்கெடுப்பு ஜனநாயக முறையில் நடந்ததாகச் சொல்ல முடியாது என்று மூத்த பத்திரிகையாளர் என்.ராம் கூறியிருக்கிறார்.
தமிழக சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்துவரும் வேளையில் அங்கு செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களுக்கு அதிக அளவில் காட்பாடுகள் விதிக்கப்பட்டன. பிபிசி செய்தியாளர் முரளிதரன் அங்குள்ள நிலையை விளக்குகிறார்.
சென்னை எண்ணூர் துறைமுகத்தில் இரண்டு தனியார் சரக்கு கப்பல்கள் மோதிய சம்பவத்தில் சென்னை கடற்கரைப்பகுதிகளில் இரண்டு வாரங்களுக்கு முன் மிதந்த எண்ணெய் கசிவுகள், கடலூரில் கடற்கரைப் பகுதியில் காணப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தற்போது கடலூரில் உள்ள நிலை குறித்து சுற்றுசூழல் ஆர்வலர் அருள்செல்வத்திடன் பேட்டி.
இன்றைய தமிழோசையில், முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கத்தில், தமிழக சட்டப்பேரவையில் நாளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவது குறித்த செய்தி மற்றும் பேட்டி இரன்டு வாரங்களுக்கு முன் சரக்கு கப்பல்கள் மோதிய சம்பவத்தால் சென்னையை அடுத்து கடலூரில் எண்ணெய் கழிவுகள் மிதப்பதாக மீனவர்கள் அச்சம் ஆகியவை கேட்கலாம்
இன்றைய தமிழோசையில், முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கத்தில், தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவிஏற்றுக்கொண்டது குறித்த செய்தி புதிய முதல்வரின் நியமனம் குறித்து மக்களின் கருத்துக்கள் ஆகியவை கேட்கலாம்
சசிகலா உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து முதலமைச்சராக முடியாதென்ற நிலை ஏற்பட்டபின்னர், அவரது ஆதரவாளராகக் கருதப்படும் எடப்பாடி பழனிச்சாமியை அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவராக்கினார். சசிகலாவின் தயவால் முதலமைச்சர் பதவிக்கு வந்திருக்கும் எடப்பாடி பழனிச்சாமி எந்த அளவு சுதந்திரமாகச் செயல்படுவார் என்று மூத்த ஊடகவியலாளரும், அரசியல் விமர்சகருமான கே.என்.அருணிடம் கேட்டார் மணிவண்ணன்
இன்றைய தமிழோசையில், முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கத்தில், சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளியாக தீர்ப்பளிக்கபட்ட அதிமுக பொது செயலாளர் சசிகலா பெங்களுருவில் சரணடைந்தது குறித்த செய்தி சசிகலா ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் கட்டாயப்படுத்தப்பட்டு கூவத்தூர் தனியார் விடுதியில் வைக்கப்பட்டுள்ள புகாரை அடுத்து காவல் துறையினர் விசாரணை ஆகியவை கேட்கலாம்
இன்றைய தமிழோசையில், முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கத்தில், சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், அதிமுக பொது செயலாளர் சசிகலா உள்ளிட்ட மூவருக்கு சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து அரசியல் கட்சிதலைவர்களின் கருத்துக்கள் ஆகியவை கேட்கலாம்
இன்றைய தமிழோசையில், , அதிமுகவில் சசிகலா – பன்னீர் செல்வம் அணிகளுக்கிடையில் அதிகார மோதல்கள் தொடரும் நிலையில், மூன்றாவது நாளாக ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் சசிகலா ஆலோசனை நடத்தியிருப்பது குறித்த செய்தி பரபரப்பான தமிழக அரசியல் சூழ்நிலையில் திமுகவின் உயர்நிலைக் குழுக் கூட்டம் தொடர்பான செய்தி ஆகியவை கேட்கலாம்
தமிழக அரசியல் குழப்பத்தில் பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த இரண்டு மத்திய அமைச்சர்கள் ஈடுபாடு காட்டியிருக்கலாம் என்று அந்தக் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இன்றைய தமிழோசையில், அதிமுகவில் சசிகலா – பன்னீர் செல்வம் அணிகளுக்கிடையில் அதிகார மோதல் நடக்கும் நிலையில் அதுகுறித்த செய்திகள் இந்த நிகழ்வுகள் குறித்து சுப்ரமணியன் சுவாமியின் பேட்டி மற்றும் நேயர் நேரம் ஆகியவை கேட்கலாம்.
இன்றைய தமிழோசையில், முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கத்தில்,
ஆளுநர் முடிவெடுப்பதில் ஏற்படும் காலதாமதம் அதிமுகவைப் பிளவுபடுத்தும் முயற்சி என்று சசிகலா குற்றச்சாட்டு
தமிழக முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தின் அணியில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஒரு அமைச்சர் இன்று இணைந்துள்ளது குறித்த செய்தி ஆகியவை கேட்கலாம்
இன்றைய தமிழோசையில், முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கத்தில், தமிழகத்தில் 130 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் காணாமல் போய்விட்டதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது குறித்த செய்தி இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் தமிழ் பேசும் மக்களின் கோரிக்கைகளை முன்வைத்து இன்று நடந்த பேரணி ஆகியவை கேட்கலாம்
இன்றைய தமிழோசையில், முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கத்தில்,
தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைத் தொடர்ந்து தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா நடராஜன் தனித்தனியே ஆளுநரை சந்தித்தது குறித்த செய்தி
பன்னீர்செல்வம் முதல்வர் பதவிக்கு தகுதியில்லாதவர் என பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டியில் பா.ஜ.கவின் மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி தெரிவித்துள்ள கருத்து
மற்றும் இலங்கை செய்திகளை கேட்கலாம்
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில் பன்னீர்செல்வம் முதல்வர் பதவியிலிருந்து ராஜிநாமா செய்ய கட்டாயப்படுத்தபட்டாரா என்ற சர்ச்சைக்கு சசிகலா அளித்த பதில் முதல்வர் பன்னீர்செல்வம் பிபிசி தமிழுக்கு அளித்த சிறப்புப் பேட்டி ஆகியவை கேட்கலாம்
ஓ. பன்னீர் செல்வம் ஆட்சியமைத்தால் திமுக ஆதரவளிக்கும் என்று மூத்த பத்திரிகையாளர் என். ராம், பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் ராஜிநாமா செய்வதாக ஆளுநருக்குத் தெரிவித்துக் கடிதம் எழுதி, அதை ஆளுநரும் ஏற்றுக்கொண்டுவிட்ட நிலையில், அந்த கடிதத்தைத் திரும்பப் பெறுவது சாத்தியமில்லை என்று அரசியல் சட்ட வழக்குரைஞர் மோகன் பராசரன்பிபிசி தமிழோசையிடம் தெரிவித்திருக்கிறார்.
இன்றைய தமிழோசையில், முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கத்தில், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளது என அ.தி.மு.கவைச் சேர்ந்த முன்னாள் சபாநாயகர் பி.ஹெச். பாண்டியனின் தெரிவித்துள்ள கருத்து பற்றிய செய்தி சென்னை எண்ணூர் துறைமுகத்தில் கப்பல்கள் மோதிய சம்பவத்தில் சுற்றுசூழல் பாதிப்புக்கு இழப்பீடு கோருவதில் ஏற்படும் தாமதம் குறித்த பேட்டி மற்றும் இலங்கை செய்திகளை கேட்கலாம்
ஞாயிற்றுக்கிழமையன்று ஆளும் கட்சியான அ.தி.மு.கவின் சட்டமன்ற கட்சித் தலைவராக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நெருக்கமான தோழியும் கட்சியின் பொதுச் செயலாளருமான சசிகலா தேர்வுசெய்யப்பட்டிருந்த நிலையில், ஜெயலலிதாவின் இல்லம் இருந்த போயஸ் கார்டன் சாலைக்கு வந்த ஒரு ராப் இசைக் குழுவினர், இந்தத் தேர்வைக் கடுமையாக விமர்சித்து பாடல்களைப் பாடினர்.
அந்தப் பாடல் காட்சி ஃபேஸ்புக்கில் நேரலையாகவும் ஒளிபரப்பானது. சுரேஷ் விகாஸ் என்பவர் இசையமைக்க சோஃபியா தேன்மொழி அஸ்ரப் என்பவர் பாடிய அந்தப் பாடல் சமூக வலைதளங்களில் மிகத் தீவிரமாக பரவ ஆரம்பித்துள்ளது.
"என் ஓட்டு உனக்கில்லை" என்ற அந்தப் பாடலைத் தாங்கள் பாடிச் சென்றபோது, தன்னுடைய உடை குறித்து காவல்துறையினர் கேள்வி எழுப்பியதாகவும் ஆனால், தங்கள் பாடலுக்கு பொதுமக்களிடம் பெரும் ஆதரவு இருந்ததாகவும் பிபிசியிடம் கூறினார் சோஃபியா.
இன்றைய நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குபவர் சிவக்குமார்
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் மருத்துவர்கள் விளக்கமளித்த செய்தி
தமிழகத்தில் இன்று தொடங்கிய தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசி முகாம் குறித்து தமிழக சுகாதார துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்த கருத்து ஆகியவை கேட்கலாம்
இன்றைய நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குபவர் சிவக்குமார்
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்
அதிமுகவின் சட்டமன்ற கட்சித் தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டுள்ளது குறித்த செய்தி
அதிமுகவின் சட்டமன்ற கட்சித் தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டுள்ளது குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து ஆகியவை கேட்கலாம்
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த தகவல்களை பகிரங்கப்படுத்தி, தன் மீது குற்றமில்லை என நிரூபிக்க வேண்டிய கடமை சசிகலாவுக்கு உள்ளதாக அரசியல் விமர்சகர் ஞாநி, பிபிசி தமிழுக்கு பேட்டி.
இன்றைய தமிழோசையில், சென்னையில் எண்ணூர் துறைமுகம் அருகே மோதியதால்எண்ணெய்க் கசிவு ஏற்பட்ட நிலையில், அவை கையால் அள்ளப்படுவது குறித்து தொடர்ந்து சர்ச்சை
இலங்கையில் இன்று சுதந்திர தினம் கொண்டாப்பட்ட நிலையில், வடக்கே ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது குறித்த செய்தி ஆகியவை கேட்கலாம்.
இன்றைய தமிழோசையில், முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கத்தில், சென்னையில் எண்ணூர் துறைமுகம் அருகே மோதிக் கொண்ட இரு கப்பல்கள் சிறைபிடித்து வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுவது குறித்த செய்தி இலங்கையில் இன்று முதல் தகவல் அறியும் உரிமை சட்டம் அமலுக்கு வந்திருக்கும் நிலையில் அதன் தாக்கம் குறித்த பேட்டி உள்ளிட்ட செய்திகளைக் கேட்கலாம்
இன்றைய தமிழோசையில், முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கத்தில், ஏர்செல் மேக்ஸிஸ் வழக்கில் மாறன் சகோதரர்கள் விடுதலையாகியுள்ளது குறித்த செய்தி சென்னை துறைமுகத்தில் சரக்கு கப்பல்கள் மோதிய சம்பவத்தில் கசிந்த பெருமளவு எண்ணெய் அகற்றப்பட்டுள்ளது குறித்த செய்தி மற்றும் இலங்கை செய்திகளை கேட்கலாம்
2017-18 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜெட்லி இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். பட்ஜெட்டின் சாதமாக அம்சங்கள் என்ன? இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு இந்த ஆண்டின் பட்ஜெட்டின் பங்கு பற்றி பொருளாதார பேராசிரியர் ஸ்ரீனிவாசனின் பேட்டி
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில் 2017-18 ஆம் ஆண்டுக்கான இந்திய அரசின் பொது பட்ஜெட் குறித்த பேட்டி முல்லைத்தீவு மாவட்டத்தில் விமானப்படையினர் மக்களுக்குச் சொந்தமான காணிகளில் இருந்து வெளியேற வேண்டும் என்று மக்கள் நடத்திய போராட்டம் பற்றிய செய்தி ஆகியவை கேட்கலாம்
மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் மத்திய அரசு கொண்டுவரும் 'நீட்' அகில இந்திய நுழைவுத் தேர்வு, தமிழ் நாட்டிற்குத் தேவையில்லை என்பதை வலியுறுத்தி ஒரு சட்ட முன்வடிவை இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து முதல்வரை சந்தித்த கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவின் பேட்டி
தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு தொடர்பான போராட்டத்தில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளது குறித்த செய்தி மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள 'நீட்' தேர்வுக்கு எதிராக தமிழக அரசு கொண்டுவந்துள்ள சட்ட வரைவு குறித்த பேட்டி ஆகியவை கேட்கலாம்
இன்றைய நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குபவர் சிவக்குமார்
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்
கடந்த சனிக்கிழமையன்று இரண்டு கப்பல்கள் மோதிக்கொண்டதை அடுத்து, சென்னை கடற்பரப்பில் பரவிய எண்ணெய் படலம் குறித்த செய்தி
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை குறித்து காவிரி பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் ஆறுபாதி கல்யாணம் தெரிவித்த கருத்து ஆகியவை கேட்கலாம்
இன்றைய நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குபவர் சிவக்குமார்
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்
ஏழு குறிப்பிட்ட இஸ்லாமிய நாடுகளிலிருந்து வரும் பயணிகள் மீது பயண கட்டுப்பாடுகள் விதித்த அமெரிக்க அதிபர் டிரம்பின் உத்தரவு, குறித்து மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்த கருத்து
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டங்களில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க நடிகர் சிம்பு விடுத்த கோரிக்கை ஆகியவை கேட்கலாம்
இன்றைய தமிழோசையில், சென்னையில் ஜல்லிக்கட்டுக்கான போராட்டத்தின் இறுதியில் வன்முறையில் ஈடுபட்ட தேசவிரோத சக்திகள் தண்டிக்கப்பட வேண்டும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி, ஜல்லிக்கட்டு வன்முறையில் போலீசார் அத்துமீறி நடந்துகொண்டதாகக் கண்டனம் தெரிவித்து மக்கள் நலக்கூட்டியக்கத்தின் சார்பில் போராட்டம் மற்றும் நேயர் நேரம் ஆகியவை கேட்கலாம்.
இன்றைய தமிழோசையில், சென்னையில் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் இறுதியில் நடந்த வன்முறையின்போது, நடுக்குப்பம் மீனவர் குடியிருப்பில் போலீசார் தீ வைத்து சேதப்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான செய்தி வளரும் நாடுகளில் கருக்கலைப்பு நடவடிக்கை மற்றும் அதுகுறித்த பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் தொண்டு நிறுவனங்களுக்கான அமெரிக்க நிதியுதவியை நிறுத்த அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டிருப்பதால் ஏற்படும் தாக்கம் குறித்த பேட்டி மற்றும் இலங்கைச் செய்திகள் கேட்கலாம்..
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் உணர்வினை பிரதிபலிக்கும் வகையில் பெப்சி, கோக் உள்ளிட்ட வெளிநாட்டு குளிர் பானங்கள் மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் உள்ள ஏறக்குறைய 21 லட்சம் கடைகளில் விற்பனை செய்யப்படாது என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா பிபிசி தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி அழகாக இருப்பதால் உத்தர பிரதேச தேர்தலில் முன்னிறுத்தபட்டுள்ளார் என்ற பாஜக தலைவரின் கருத்து சர்ச்சையானது குறித்த செய்தி
ஜல்லிக்கட்டு போராட்டத்தை அடுத்து தமிழகத்தில் பெப்சி கோக் விற்பனையை நிறுத்தப்போவதாக வணிகர்கள் அமைப்பு கூறியிருப்பது பற்றிய செய்தி ஆகியவை கேட்கலாம்
சென்னையில் ஜல்லிக்கட்டு நடத்த நிரந்தர சட்டம் கோரி போராடியவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த காவல் துறையினர் முற்பட்ட போது வெடித்த வன்முறைக்கு, அரசின் கவனக்குறைவு தான் காரணம் என்கிறார் சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமன் பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டி'
இன்றைய தமிழோசையில், முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கத்தில்,
ஒரு வார காலமாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிரந்தர சட்டம் தொடர்பான போராட்டம் நிறைவு பெற்றது குறித்த செய்தி
இலங்கையில் எட்டு மாகாண சபைகளிலும் நிராகரிக்கப்பட்டுள்ள மத்திய அரசின் சிறப்பு அபிவிருத்தி சட்ட மூலம் குறித்த செய்தி ஆகியவை கேட்கலாம்
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்
ஜல்லிக்கட்டுக்கான புதிய சட்டம் இன்று தமிழக சட்டசபையில் நிறைவேறியுள்ளது குறித்த செய்தி
சென்னை கடற்கரையில் செய்தி சேகரிக்க சென்ற பிபிசி தமிழோசையின் செய்தியாளர் ஜெயக்குமாரின் கேமரா லென்ஸ் உடைக்கப்பட்டது குறித்த செய்தி
ஆகியவை கேட்கலாம்
புதுக்கோட்டை இன்று நடந்த ஜல்லிக்கட்டில் இரண்டு உயிரிழப்புகள் நடந்ததாக கூறப்படுவது குறித்து தமிழக பள்ளி கல்வித் துறை அமைச்சர் பாண்டியராஜன் பிபிசி தமிழோசையிடம் உரையாற்றினார்.
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் காளை மாடு முட்டியதில் இருவர் இறந்துள்ளதாக செய்திகள் வந்துள்ள நிலையில், இது குறித்து பள்ளி கல்வித் துறை அமைச்சர் பாண்டியராஜன் அளித்த பேட்டி
ஜல்லிக்கட்டு போராட்டத்தை போராட்டக்காரர்கள் தள்ளிவைக்க வேண்டும் என ஜல்லிக்கட்டு ஆதரவாளரும்,காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மையத்தின் தலைவருமான கார்த்திகேய சேனாபதி விடுத்த கோரிக்கை ஆகியவை கேட்கலாம்
ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டத்தை போராட்டக்காரர்கள் தள்ளிவைக்க வேண்டும் என்று காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மையத்தின் தலைவர் கார்த்திகேய சேனாபதி கூறியிருக்கிறார். பிபிசி தமிழோசைக்கு பேட்டியளித்த சேனாபதி, இந்த அவசர சட்டம் தலைவலிக்கு தற்காலிக நிவாரணி தருவது போன்ற ஒரு தீர்வுதான், அதை சட்டமன்றம் சட்டமாக்குவதுதான் நிரந்தர தீர்வு . ஆனால் அதற்கு காலமெடுக்கும் என்ற நிலையில், ஓரளவு கால அவகாசம் தந்து, உதாரணத்துக்கு மார்ச் 31 வரை தந்து, பின்னர் தேவைப்பட்டால் இதை மீண்டும் தொடங்கலாம் என்றார் .
தமிழக அரசு பிறப்பித்த அவரச சட்டத்தின் படி, ஜல்லிக்கட்டு மதுரையில் நடத்தப்படும் என ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகர் தெரிவித்துள்ளார். சென்னை மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களிலும், குறிப்பாக மதுரையிலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் ஜல்லிக்கட்டு நடத்த நிரந்தர சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்று கோரி போராட்டத்தை கைவிட மறுத்துவிட்டனர்.
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் கொண்டுவர கொண்டுவரப்பட்டுள்ளது குறித்த செய்தி
ஜல்லிக்கட்டு அவரச சட்டம் கொண்டுவரப்பட்ட பின்னும் போராட்டக்கார்கள் கலைய மறுத்தது குறித்த செய்தி ஆகியவை கேட்கலாம்
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அவரச சட்டம் பிறப்பிக்கப்படும் என முதல்வர் பன்னீர்செல்வத்தின் அறிவிப்பு குறித்த செய்தி இலங்கையில் எச்.ஐ.வி நோயினால் பாதிக்கப்பட்டுள்ள விமான சேவை ஊழியரை ஸ்ரீ லங்கன் விமான நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ள வழக்கு ஆகியவை கேட்கலாம்
ஜல்லிக்கட்டு தடை தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், ஜல்லிக்கட்டு தமிழ்ப் பண்பாட்டின் ஒரு சின்னமாக ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களால் பார்க்கப்படுகிறது.
ஆனால் இது அனைத்து தமிழ் மக்களின் பண்பாட்டு சின்னம் என்று கூறமுடியாது, இது நிலப்பிரபுத்துவ அமைப்பின் அம்சங்கள் இருக்கின்றன. சாதிய ஒடுக்குமுறையின் அம்சங்களும் இருக்கின்றன என்று சில தலித் அமைப்பினர் கூறுகின்றனர். குறிப்பாக தலித்துகள், ஜல்லிக்கட்டு நடத்தப்படும் சில கிராமங்களில், மாட்டை அடக்க அனுமதிக்கப்படுவதில்லை என்றும் கூறப்படுகிறது. புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இது போன்ற கருத்தை வெளியிட்டிருந்தார். இந்த கருத்து குறித்து எழுத்தாளரும் செயற்பாட்டாளருமான ஸ்டாலின் ராஜாங்கம் அவர்கள் பிபிசி தமிழுக்குத் தெரிவித்த கருத்துகள்
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையையொட்டி இந்திய பிரதமர் மோதியை இன்று சந்தித்த பின்னர் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்த கருத்து
தமிழகத்தில் தொடந்து வரும் ஜல்லிக்கட்டு ஆர்ப்பாட்டங்கள் குறித்த செய்தி ஆகியவை கேட்கலாம்
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி தர வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழகமெங்கும் போராட்டங்கள் நடந்து வரும் வேளையில், இது குறித்து தனது கருத்துக்களை பிபிசி தமிழோசையிடம் விலங்குகள் நல ஆர்வலர் ராதா ராஜன் பகிர்ந்து கொண்டார்.
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் கொண்டுவர இந்திய பிரதமரை சந்திக்கும் தமிழக முதல்வர்
ஓரினச்சேர்க்கை குற்றமற்றது என இலங்கை அமைச்சரவை முடிவு செய்துள்ள நிலையில், இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் எழுந்துள்ள கருத்துக்கள் குறித்த சமூக ஆய்வாளரின் பேட்டி ஆகியவை கேட்கலாம்
அதிமுகவை உடைக்க வேண்டிய தேவை பாஜகவிற்கு இல்லை என பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன், அதிமுக பொது செயலாளர் சசிகலாவின் கணவர் நடராஜன், அதிமுகவில் பிளவு ஏற்படுத்த பாஜக முயல்வதாக குற்றம்சாட்டினார். இது குறித்து பிபிசி தமிழோசையிடம் பேசிய பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், ''அதிமுகவை பலப்படுத்துவது அந்த கட்சியின் பொறுப்பு. அந்த கட்சியை உடைப்பதற்கான தேவை எங்களுக்கு இல்லை. எங்களது கட்சியை தமிழகத்தில் பிரதான கட்சியாக மாற்ற நாங்கள் உழைத்து வருகிறோம்,''என்றார் .
இன்றைய தமிழோசையில், முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கத்தில்,
ஜல்லிக்கட்டு நடத்த வேண்டி தமிழகத்தில் ஆங்காங்கே தொடர்ந்த போராட்டங்கள் குறித்த செய்தி
இலங்கையில் நிலவும் வறட்சி நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்த பேட்டி ஆகியவை கேட்கலாம்
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கக் கோரி மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் இன்று நடந்த ஆர்ப்பாட்டம் குறித்த செய்தி
சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவின் பிரிவுக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது குறித்து பத்திரிக்கையாளர் வித்யா சுப்பிரமணியன் அளித்த பேட்டி ஆகியவை கேட்கலாம்
உத்தரப்பிரதேசத்தில் இன்னும் சில வாரங்களில் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் , ஆளும் சமாஜ்வாடி கட்சியில் ஏற்பட்ட குழப்பங்கள் அக்கட்சியின் வெற்றி வாய்ப்பைப் பாதிக்கும் என்று கூறப்பட்ட்து. ஆனால் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி பிரிவுக்கு, இந்த கட்சியின் பிரபலமான சைக்கிள் சின்னம் ஒதுக்கப்பட்டிருப்பது அவரது குழுவின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்குமா என்று உத்தரப்பிரதேச அரசியலைக் கூர்ந்து கவனித்து கட்டுரைகள் எழுதியவரும், ஊடகவியலாளருமான வித்யா சுப்ரமணியத்திடம் கேட்டார் மணிவண்ணன்
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்
பாலமேட்டில் தடையை மீறி இன்று ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த முயற்சிகள்நடந்ததாக கூறப்படும் நிலையில், இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டளர்களில் ஒருவரான ஆறுமுகம் அளித்த பேட்டி
இலங்கை நுவரெலியாவில் நடைபெற்ற தேசிய தைப் பொங்கல் விழா நிகழ்வில் கலந்து கொண்ட இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த கருத்து ஆகியவை கேட்கலாம்
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில் தமிழகத்தில் பொங்கலன்று ஜல்லிக்கட்டு நடத்த கோரி தடையை மீறி போராட்டம் இலங்கையில் கடந்த 27 ஆண்டுகளாக அதி உயர் பாதுகாப்பு வலையத்தில் இருந்த ஊறணி கடற்பிரதேசம், மக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது குறித்த செய்தி ஆகியவை கேட்கலாம்
ஜல்லிக்கட்டு நடத்த கோரி மதுரையில் மாணவர்கள், திரைதுறையினர், மதுரை மற்றும் சுற்றுவட்ட மாவட்டத்தில் இருந்து வந்த பலரும் சனிக் கிழமையன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டு நடக்கும் இடமான அவனியாபுரத்தில் இளைஞர்கள் பலர் ஊர்வலகமாக சென்றனர். போராட்டத்தை நிறுத்துமாறு காவல் துறையினர் வலியுறுத்தினார் என்றும் தடியடி நடத்தினர் என்றும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவையைச் சேர்ந்த ஜெயகார்த்தி ஜல்லிக்கட்டு விவகாரத்தில் பி ஜே பி இளைஞர்களை ஏமாற்றியதாக குற்றம் சாட்டியுள்ளார். அவர் பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டி.
காதி மற்றும் கிராம தொழில் துறை ஆணையத்தின் அதிகாரப்பூர்வ நாள்காட்டியில் இருக்கும் ராட்டை சுற்றும் மகாத்மா காந்தியின் புகைப்படங்களை மாற்றிவிட்டு, இந்திய பிரதமர் நரேந்திர மோதி அதே பாணியில் ராட்டை சுற்றுவது போல இருக்கும் புகைப்படங்களை அச்சிடும் முடிவு சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நடவடிக்கை குறித்து, தமிழ்நாடு காந்தி ஸ்மரக் நிதியின் தலைவரும் மூத்த காந்தியவாதியுமான கே.எம்.நடராஜன் பிபிசி தமிழோசைக்கு அளித்த பேட்டி.
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில் காதி மற்றும் கிராம தொழில் துறையின் அதிகாரப்பூர்வ நாள்காட்டியில் காந்திக்கு பதிலாக இந்திய பிரதமர் மோதியின் படம் வெளியான சர்ச்சை குறித்த பேட்டி இலங்கையில் வறட்சி நிவாரண பணிகளில் முப்படையினரையும் ஈடுபடுத்தப் போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவிப்பு ஆகியவை கேட்கலாம்
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில் தமிழகத்தில் பருவ மழை பொய்த்த நிலையில் காவிரி டெல்டா பகுதிகளில் நிலவும் வறட்சி நிலை குறித்த செய்திகள் தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டி நடத்திய நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானின் பேட்டி ஆகியவை கேட்கலாம்
தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் இரண்டு நாட்களே இருக்கும் நிலையில், பொங்கலை ஒட்டி நடைபெறும் பாரம்பரிய கிராமப்புற விளையாட்டான , ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் விதித்துள்ள தடை இன்னும் நீக்கப்படாத நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தடையை மீறி இந்த விளையாட்டு நடத்தப்பட்டு வருகிறது என்று செய்திகள் கூறுகின்றன.
கடலூர் அருகே திருமாணிக்குழி என்ற இடத்தில் நாம் தமிழர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் இந்த விளையாட்டை நடத்தினார்கள்.
தடையை மீறி இந்த விளையாட்டை நடத்தக் காரணம் என்ன என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானிடம் கேட்டபோது சட்டம் என்பது மக்களுக்காகவா, அல்லது மக்கள் சட்டத்துக்காகவா என்ற கேள்வி எழுவதாகக் குறிப்பிட்டார்.
தமிழர்களின் பாரம்பரிய வரலாறு தெரியாமல் உச்சநீதிமன்றத் தடை விதிக்கப்பட்டிருப்பதாக சீமான் குறிப்பிட்டார். மக்கள் மது விற்பனையைத் தடை செய்ய விரும்புகிறார்கள், அதைச் செய்யாமல் , மக்கள் விரும்பும் ஜல்லிக்கட்டை தடை செய்வது தவறு என்றும் அவர் வாதிட்டார்.
யானை ஓட்டப்பந்தயம் கேரளாவில் நடக்கிறது, ராணுவத்தில் ஒட்டகப்பிரிவு, குதிரைப்பிரிவு போன்ற பிரிவுகள் வைத்து, கனரக ஆயுதங்களை அந்த விலங்குகளின் முதுகில் ஏற்றி போர் செய்வதை விலங்கு நல ஆர்வலர்கள் கேள்வி கேட்பதில்லை, நீதிமன்றமும் அதில் தலையிடுவதில்லை, தமிழர்கள் விரும்பும் காளையை விரட்டிப் பிடிக்கும் போட்டி மீது மட்டும் குறி வைக்கிறார்கள் என்றார் சீமான்.
இந்த வாதங்களை எல்லாம் கேட்டபின்னர்தானே உச்சநீதிமன்றம் தடையை விதித்தது, உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பை வெளியிட்டபின் அதை மீறலாமா என்று கேட்டதற்கு, கடவுளே இல்லை என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள் , எனவே நீதிமன்றத் தீர்ப்பை மீறுவதில் தவறில்லை என்றார். கேரளா , கர்நாடகா போன்ற மாநிலங்கள் நதி நீர்ப்பிரச்சனையில் நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காததை அவர் சுட்டிக்காட்டினார்.
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு நகரங்களிலும் மாணவர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். அவர்கள் பிபிசி தமிழிடம் தெரிவித்த கருத்துக்களின் தொகுப்பு
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில் தமிழகத்தில் சிவகங்கை மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் தொடர்புடையதாகக் கூறப்படும் நபர் என்கவுண்டர் என்று போலிசார் கூறும் சம்பவத்தில் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்த செய்தி
இலங்கையில் நல்லிணக்க பொறிமுறைகள் தொடர்பான அறிக்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவிக்கும் கருத்துகள் ஆகியவை கேட்கலாம்
இந்தியாவில் பீட்டா(PETA -People for the Ethical Treatment of Animals) செயல்பட தொடங்கிய பிறகு தான், நாட்டு மாடு மற்றும் காளை இனங்களின் அழிவு தொடங்கியது என்று சேனாபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவர் கார்த்திகேய சேனாபதி தெரிவித்துள்ளார். அவர் பிபிசிக்கு அளித்த பேட்டி இது
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில் தமிழகத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு பொங்கல் விடுமுறை அளிப்பது சர்ச்சையானது குறித்த செய்தி
இலங்கையில், தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் பகடி வதை காரணமாக தடை செய்யப்பட்ட மாணவர்களை அனுமதிக்க கோரி போராட்டம் ஆகியவை கேட்கலாம்
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்
மின் வாரியங்களின் கடன்களைச் சீரமைப்பதற்காக உருவாக்கப்பட்ட 'உதய்' திட்டத்தில் தமிழ்நாடு இன்று இணைந்துள்ளது குறித்து மின்துறை பொறியாளர் அமைப்பின் தலைவர் காந்தி தெரிவித்த கருத்து
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடந்து வரும் சூழலில், இது குறித்து விலங்குகள் நல ஆர்வலர் ராதா ராஜன் அளித்த பேட்டி ஆகியவை கேட்கலாம்
இன்றைய நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குபவர் சிவக்குமார்
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்
நாளை முதல் சில வங்கிகளின் டெபிட் மற்றும் கிரெடிட் அட்டைகள் பெட்ரோல் பங்குகளில் ஏற்றுக்கொள்ளப்படாது என்று அறிவிப்பு குறித்து தமிழக பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் முரளி அளித்த பேட்டி
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி இன்று சென்னையில் நடந்த பேரணி குறித்து இப்பேரணியின் ஒருங்கிணைப்பாளரான பாலக்குமார் சோமு அளித்த பேட்டி ஆகியவை கேட்கலாம்
மூன்று நாட்களுக்கு முன்பு அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்த அதிமுகவின் பேச்சாளர் நாஞ்சில் சம்பத், அதிமுகவின் பொது செயலாளர் சசிகலாவை இன்று நேரில் சந்தித்த பிறகு, தான் அதிமுகவில் தொடருவதாகத் தெரிவித்துள்ளார்.
இன்றைய தமிழோசையில், இலங்கையின் தெற்கே அம்பாந்தோட்டையில் சீன முதலீட்டில் துறைமுக நகரம் மற்றும் தொழில் மண்டலம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் வன்முறை திமுகவினர் யாரும் தன் காலில் விழக்கூடாது என அக் கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டிருப்பது குறித்த ஒரு பேட்டி உள்ளிட்டவை கேட்கலாம்.
தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாய நிலங்களின் நிலை குறித்து தமிழக அமைச்சர்களின் குழு ஆய்வு நடத்தியது குறித்த செய்தி
இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து கிடைக்கப்பெறும் ஜி.எஸ்.பி வரிச் சலுகை ஒருவாரத்தில் கிடைக்கவிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளது குறித்த செய்தி ஆகியவை கேட்கலாம்
செல்லாமல் ஆக்கப்பட்ட 500 மற்றும் 1,000 நோட்டுகள் பிரச்சனை 50 நாளில் முடிவுக்கு வரும் என்று அறிவித்த பிரதமர் மோதியின் வாக்குறுதி செயல்பாட்டிற்கு வரவில்லை என்று ஜோதிமணி பதிவிட்ட பிறகு, இணையத்தில் தன் மீதான பாலியல் தாக்குதல் தொடங்கியது என்கிறார். ஜோதிமணியின் புகார் குறித்து தமிழிசை சௌந்தரராஜன், ''ஜோதிமணி சந்தித்த இணைய வழியான பாலியல் தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன். இதை நான் ஏற்றுக்கொள்ள முடியாது. எங்கள் கட்சியை சேர்ந்தவர்கள் அந்த செயல்களில் ஈடுபட்டவர்களாக இருந்தால் அவர்களை கண்டிக்கும் முதல் ஆளாக நான் தான் இருப்பேன்,'' என்றார்.
ஜோதிமணியின் புகாரை ஏற்றுக்கொள்ளும் அதே வேளையில், தனது கட்சியினர் மட்டும் தான் இதில் சம்மந்தப்பட்டிருப்பதாக சொல்வது தவறு என்கிறார் தமிழிசை. ''ஜோதிமணி பிரதமர் மோதியைக் கண்டித்து எழுதிய விதத்தால் சிலர் கோபமுற்று இது போல நடந்திருக்கலாம். அவற்றை சரி என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவர்கள் எல்லோருமே பாஜகவை சேர்ந்தவர்கள் என்று சொல்வது தவறு,'' என்றார். அவர் மேலும், ''பாஜகவினர் இதுபோல அவதூறு பரப்புவதற்காக ஒரு படையை வைத்துள்ளனர் என்றும் அதற்காக பயிற்சி தரப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டிருப்பதை ஏற்க முடியாது. எங்களது கட்சி மிக நாகரீமான கட்சி,'' என்றார்.
நுற்றுக்கணக்கான அழைப்புகள், இரண்டு நிமிடங்களுக்கு ஒரு முறை தெரியாத நபர்களிடமிருந்து அழைப்புகள், வாட்ஸ்ஆப் மூலம் தகாத செய்திகள் என்று தொடர்ச்சியாக சமூக வலைத்தளத்தில் பாலியல் தாக்குதலுக்கு ஆளானதாகக் கூறுகிறார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த செய்தித் தொடர்பாளர் ஜோதிமணி. செல்லாமல் ஆக்கப்பட்ட 500 மற்றும் 1,000 நோட்டுகள் பிரச்சனை 50 நாளில் முடிவுக்கு வரும் என்று அறிவித்த பிரதமர் மோதியின் வாக்குறுதி செயல்பாட்டிற்கு வரவில்லை என்று ஜோதிமணி பதிவிட்ட பிறகு, இணையத்தில் தன் மீதான பாலியல் தாக்குதல் தொடங்கியது என்கிறார். அவர் பிபிசிக்கு அளித்த பேட்டி
இன்றைய தமிழோசையில், தமிழ்நாட்டில் பருவமழை பொய்த்ததால் வறட்சி ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், அதுதொடர்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் மற்றும் மாநிலம் முழுவதும் ஆய்வு நடத்தப்படுவது தொடர்பான செய்தி செல்லாத நோட்டு நடவடிக்கைக்காக பிரதமர் மோதியை விமர்சித்ததால் சமூக வலைத்தளத்தில் தாக்குதலுக்கு உள்ளாகும் காங்கிரஸ் பெண் செய்தித் தொடர்பாளர் ஆகியவை கேட்கலாம்.
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின், அக்கட்சின் செயல் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளது குறித்த செய்தி மற்றும் பேட்டி
இலங்கையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கும் பொறிமுறையில் மக்கள் கருத்தறியும் ஆலோசனை செயலணி பரிந்துரையின்படி, சர்வதேச நீதிபதிகள் கொண்ட கலப்பு நீதிமன்றம் அமைக்கப்பட மாட்டாது என அரசு தெரிவித்துள்ளது குறித்த செய்தி ஆகியவை கேட்கலாம்.
வறட்சி சூழ்நிலையில் பயிர் நிலைமைகள் குறித்து உயர்நிலைக்குழு அறிக்கை அளித்தவுடன், பயிர் பாதிப்புக்குரிய நிவாரணத் தொகையை விவசாயிகளுக்கு அரசு வழங்கும் என்று தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்திருக்கிறார்.
இந்த அறிவிப்பிற்கு முன்னதாக முதலமைச்சரை சந்தித்த விவசாசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பைச் சேர்ந்த பி.ஆர்.பாண்டியன் அளித்த பேட்டி
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி நிலையை கண்டறிய மாநிலம் முழுவதும் ஆய்வு நடத்த உத்தரவிட்டிருப்பதாக அரசு தெரிவித்துள்ளது குறித்த செய்தி 2009ல் இலங்கையில் இறுதி யுத்தம் முடிவடைந்த போது ராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போனவர்கள் குறித்த வழக்கில் ஏற்பட்டுள்ள திருப்பம் குறித்த செய்தி ஆகியவை கேட்கலாம்.
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்
சசிகலா தமிழக முதல்வராக பொறுப்பேற்க வேண்டுமென தம்பி துரை கோரிக்கை விடுத்துள்ள நிலையில், அதற்கு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்த செய்தி
இலங்கை திருகோணமலையில் பத்தாண்டுகளுக்கு முன்னர் கொல்லப்பட்ட தமிழ் மாணவரின் தந்தை மனோகரன் அளித்த பேட்டி ஆகியவை கேட்கலாம்
500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டு 50 நாட்கள் ஆன நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாட்டு மக்களுக்கு சில அறிவிப்புக்களை வெளியிட்டார். இந்த அறிவிப்புகள் குறித்து பொருளாதார நிபுணர் சீனிவாசன் பிபிசி தமிழோசையிடம் எடுத்துரைத்தார்.
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்
நேற்று பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட அறிவிப்புகள் குறித்து பொருளாதார நிபுணர் சீனிவாசன் அளித்த பேட்டி
சமாஜ்வாதி கட்சி தலைவர்கள் இடையே தொடர்ந்து நடந்து வரும் மோதல்கள் குறித்து பத்திரிக்கையாளர் சேகர் ஐயர் அளித்த பேட்டி ஆகியவை கேட்கலாம்
இன்றைய தமிழோசையில், இந்தியாவில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கபட்டு 50 நாட்கள் ஆகும் நிலையில், பிரதமர் நரேந்திர மோதி வெளியிட்டுள்ள புதிய அறிவிப்புக்கள் அதிமுக பொதுச் செயலராக சசிகலா பொறுப்பேற்றுள்ளது குறித்த செய்தி மற்றும் நேயர் நேரம் ஆகியவை கேட்கலாம்
இன்றைய தமிழோசையில், முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கத்தில், இந்தியாவில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கபட்டு 50 நாட்கள் ஆகும் நிலையில், பிரதமர் நரேந்திர மோதி அளித்த வாக்குறுதி நிறைவேறியதா என்பது குறித்த ஆய்வு இந்தத் திட்டம் சரியான இலக்கை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக பாரதீய ஜனதா கருத்து மற்றும் இலங்கைச் செய்திகளைக் கேட்கலாம்.
அதிமுக பொதுச் செயலராக, தாற்காலிக அல்லது இடைக்கால அடிப்படையில் சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், முழுமையான பொதுச் செயலராக இன்று அவர் ஏன் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பது குறித்து அதிமுக செய்தித் தொடர்பாளர் பொன்னையன் பதிலளித்துள்ளார்.
இன்றைய தமிழோசையில், முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கத்தில், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டப்பட்டதாக அறிவிக்கப்பட்ட எம் பி சசிகலா புஷ்பாவின் ஆதரவாளர்கள் மீது சென்னையில் நடத்தப்பட்ட தாக்குதல் இலங்கையில் ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த அமைச்சர்களின் போக்கை தமிழ் முற்போக்கு கூட்டணியின் அமைச்சர்கள் விமர்சனம் செய்திருப்பது குறித்த செய்தி ஆகியவை கேட்கலாம்
சென்னையில் அ.தி.மு.கவிலிருந்து நீக்கப்பட்டப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சசிகலா புஷ்பாவின் ஆதரவாளர்கள் மீது ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது. இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய சசிகலா புஷ்பா, ''அதிமுகவின் பொது செயலாளர் பதவிக்கு போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்வதற்காக தான் எனது வழக்கறிஞர் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்றார். நாளை ரகசிய முறையில் தேர்தல் நடைபெறவுள்ளதாக நாங்கள் அறிந்தோம். எனது வேட்புமனு, எனது வழக்கறிஞரின் வேட்புமனு மற்றும் மும்பையை சேர்ந்த மற்றொரு நபரின் வேட்புமனு ஆகியவற்றை தாக்கல் செய்ய சென்ற நேரத்தில் இந்த தாக்குதல் நடந்துள்ளது,'' என்றார்.
தமிழகத்தின் தலைமை செயலராக இருந்த ராம மோகன ராவின் வீடு மற்றும் இல்லத்தில் நடத்தப்பட்ட சோதனைக்கு பிறகு ஊடகங்களுக்குப் பேட்டியளித்த அவரின் பேச்சு ஒரு அதிமுக உறுப்பினரின் பேச்சு போன்றது என துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார். ராமமோகன ராவின் இல்லம் மற்றும் அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனை மற்றும் அவர் தனது உயிருக்கு ஆபத்து உள்ளது எனப் பேசியது குறித்து பிபிசி தமிழிடம் கருத்து தெரிவித்த குருமூர்த்தி, ''ஓர் அதிமுக உறுப்பினர் பேசுவது போன்றே அவரது பேச்சு இருந்தது. அவரது உயிருக்கு யாரால் ஆபத்து என்பதைக் குறிப்பிடவில்லை. அம்மாவால் வளர்க்கப்பட்டவன் என்று அவர் குறிப்பிடுவது ஓர் அரசாங்க அதிகாரிக்கு எந்தவிதத்திலும் பொருந்தாத ஒரு செய்கை,,'' என்றார். ''ராமமோகன ராவ் வீட்டில் தடயம் கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டார். அவரது மகனின் வீட்டில் தடயம் இல்லை என்று சொல்லவில்லை. இது ஓர் அரசியல் தலைவர் சொல்வது போல உள்ளது. அவரது அலுவலகத்தில் எந்தக் கோப்புகளும் சிக்கவில்லை என்று அவர் சொல்லமுடியுமா?'' என்று கேள்வி எழுப்பினர். தமிழகத்தில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையின் போது மத்திய பாதுகாப்பு படை பயன்படுத்தப்பட்டது குறித்துக் கேட்டபோது , ''ராமமோகன ராவ் தலைமை செயலர். தமிழக காவல் துறையினர் அவரின் கட்டளையை ஏற்க வேண்டும். அதனால் மத்திய படையை பயன்படுத்தியதில் எந்தத் தவறும் இல்லை,'' என்றார். பாரதீய ஜனதா ஆட்சியில் இல்லாத, பலம் பொருந்திய மாநில கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் அதிக அளவில் வருமான வரி சோதனை நடத்தப்படுகிறதா என்று கேட்டபோது,''தமிழகத்தில்தான் 32 கோடி ரூபாய் புதிய நோட்டுகள் கண்டுபிக்கப்பட்டன. பாரதீய ஜனதா ஆளும் குஜராத், மகாராஷ்டிராவில் கூட தான் சோதனை நடத்தப்பட்டது, பணம் பிடிபட்டது, தினமும் செய்தி வருகிறது. ஆனால் பாரதீய ஜனதாவுக்கு தன் மீது பழிவாராமல் காத்துக் கொள்ளவது எப்படி என்று தெரியும்,'' என்று குறிப்பிட்டார்.
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்
வருமானவரித்துறையின் சோதனைக்கு பிறகு தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என தமிழக முன்னாள் தலைமை செயலர் ராம மோகன ராவ் குற்றச்சாட்டு
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மக்கள் நலக் கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது குறித்த செய்தி
ஆகியவை கேட்கலாம்
தனது வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது குறித்து தமிழகமுன்னாள் தலைமைச் செயலர் ராம மோகன ராவ் தெரிவித்த குற்றச்சாட்டுக்கள் நியாயமானவையா என்பது குறித்து மேற்கு வங்க மாநில முன்னாள் கூடுதல் தலைமைச் செயலர் பாலச்சந்திரன் பிபிசி-க்கு அளித்த பேட்டி
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்
சென்னையில் இன்று நடைபெற்ற 12 ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தில் உரையாற்றிய தமிழ்நாடு மீனவர் பேரவை அமைப்பின் தலைவர் அன்பழகனார் தெரிவித்த கருத்து
இந்தியாவில் இஸ்லாமிய முறைப்படி உடை அணிவது குறித்து சென்னை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரான சாதிக் அளித்த பேட்டி ஆகியவை கேட்கலாம்
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்
மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் இல்லத்திற்கு இன்னமும் காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்படுவது குறித்து ஓய்வுபெற்ற தமிழக டிஜிபி அலெக்ஸான்டர் அளித்த பேட்டி
இலங்கையில் கிழக்கு மாகாணத்துக்கு இந்தாண்டு வழங்கப்படும் நிதியில் பெரும் பகுதி கிடைக்கவில்லை என்று கூறப்படும் நிலையில், அது குறித்து கிழக்கு முதலமைச்சர் ஹாஃபிஸ் நசீர் அஹ்மத் தெரிவித்த கருத்து ஆகியவை கேட்கலாம்
தமிழக அரசின் தலைமைச் செயலராக இருந்த ராம மோகன ராவ் வீட்டில் நடந்த வருமான வரிச் சோதனை குறித்து பிபிசி தமிழோசைக்கு பேட்டியளித்த அ.தி.மு.கவின் செய்தித் தொடர்பாளர் தீரன், மத்திய அரசின் இந்த நடவடிக்கை பாரபட்சமானது என்றும், தலைமை செயலகத்தில் துணை ராணுவத்தை அனுப்பியதுதான் ஏற்றுக் கொள்ளமுடியாதது என்றும் கூறியுள்ளார்.
இன்றைய தமிழோசையில், முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கத்தில், தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலர் ராம்மோகன ராவ் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது அலுவலகத்தில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனைக்கு அதிமு கண்டனம் இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் எம்.பி. நடராஜா ரவிராஜ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேர் விடுதலை செய்யப்பட்ட நிலையில், அதுகுறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சுமந்திரன் கருத்து மற்றும் நேயர் நேரம் ஆகியவை கேட்கலாம்.
இன்றைய தமிழோசையில், முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளுடன் கட்த்தப்பட்ட லிபியா விமானமத்தின் கடத்தல்கார்ர்கள் சரணடைந்திருப்பது குறித்த செய்தி
மாகாண முதலமைச்சர்களுடன் இலங்கைப் பிரதமர் நடத்தி ஆலோசனைக் கூட்டம் திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியது உள்ளிட்ட செய்திகளைக் கேட்கலாம்..
தமிழக அரசின் தலைமைச் செயலர் ராம மோகன ராவ் வீட்டில் நடந்த வருமான வரிச் சோதனை, முடிவல்ல, ஆரம்பம்தான் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் என். ராம். இதுகுறித்து, பிபிசி தமிழுக்கு அவர் அளித்த பேட்டி.
தமிழகத்தின் புதிய தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள கிரிஜா வைத்தியநாதனிடம் லஞ்ச ஒழிப்புத் துறையின் கூடுதல் பொறுப்பும் இருப்பது அவரது வேலையை சிக்கலாக்கும் என முன்னாள் ஐ.ஏ.ஸ் அதிகாரி தேவசகாயம் தெரிவித்துள்ளார். தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகன ராவின் வீட்டிலும், தலைமை செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்திலும் நடத்தப்பட்ட வருமான வரி சோதனைக்குப் பிறகு, அவருக்கு பதிலாக புதிய தலைமைச் செயலராக கிரிஜா வைத்தியநாதன் வியாழக் கிழமை நியமிக்கப்பட்டார்.
இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய முன்னாள் ஐ.ஏ.ஸ் அதிகாரி தேவசகாயம், ''தலைமை செயலாளர் என்ற பதவியும், லஞ்ச ஒழிப்புத் துறையின் தலைமை அதிகாரியாகவும் ஒரே அதிகாரி செயல்படுத்துவது பெரிய பிரச்சனை. மாநிலத்தின் தலைமை செயலாளர் தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளை ஒருங்கிணைத்து, வழிநடத்த வேண்டியவர். அதே அதிகாரி லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தலைமை வகித்தால், பல முரண்பாடுகள் ஏற்படும்,'' என்றார்.
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில் தமிழக அரசின் தலைமைச் செயலரின் இல்லம் மற்றும் அலுவகத்தில் நடந்த வருமான வரிச் சோதனையை அடுத்து, புதிய செயலர் நியமிக்கப்பட்டுள்ளது குறித்த செய்தி மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை சந்தித்த பல்கலைக்கழகத் துணை வேந்தர்களை பதவி நீக்கம் செய்ய கோரிய திமுகவின் கருத்துக்கு அதிமுகவின் பதில் ஆகியவை கேட்கலாம்.
இன்றைய தமிழோசையில், முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கத்தில், தமிழக தலைமைச் செயலரின் இல்லம் மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது குறித்த செய்தி மற்றும் பேட்டி இலங்கையின் வடமாகாண பட்ஜெட் கூட்டத்தொடரில் ஏற்பட்ட அமளி குறித்த செய்தி ஆகியவை கேட்கலாம்
ஜெர்மனியின் பெர்லின் நகரத்தில் மக்கள் கூட்டம் மிகுந்த கிறிஸ்மஸ் சந்தை பகுதிக்குள் ஒரு தனி நபர் லாரியை ஓட்டிச் சென்றதால், 12 பேர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் அதிகம் வாழும் பெர்லின் நகரத்தில் நடந்த அந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து ஃபிராங்கஃபர்ட் தமிழ் சங்க தலைவர் ஞானசேகரனிடம் பேசிய போது அங்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.
அவர், ''பெர்லினில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் குறிப்பாக தமிழகர்கள் வசிக்கும் பகுதி.கிறிஸ்துமஸ் சந்தைக்கு குழந்தைகளை பெற்றோர்கள் அழைத்து வருவார்கள். அலுவலகங்களில் இந்தச் சந்தைக்கு செல்லுவதற்குத் தனி நேரம் கொடுப்பார்கள். மிகவும் கூட்ட நெரிசலாக இருந்தாலும், பலரும் இந்தச் சந்தையை விரும்புவார்கள். தற்போது மக்கள் பயத்துடன் உள்ளனர்,'' என்றார்.
பெர்லின் தெருக்களில் அதிக எண்ணிக்கையில் போலிசார் குவிந்துள்ளனர் என்ற ஞானசேகரன்,''அரசு இது போன்ற சம்பவம் இனி நடக்காது என்று பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி வாயிலாக உறுதி அளித்துள்ளது. ஆனால் குழந்தைகளை அழைத்துச் செல்ல பெற்றோர்கள் யோசிக்கும் நிலை தான் உள்ளது,'' என்றார்.
இன்றைய தமிழோசையில், முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கத்தில்,
பெர்லின் நகரத்தின் கிறிஸ்துமஸ் சந்தையில் நேற்று மக்கள் கூட்டத்திற்குள் ஒருவர் லாரியை செலுத்தி 12 நபர்களை கொன்றது குறித்த செய்தி இந்தியாவில் நதி நீர் பங்கீடு பிரச்னையை தீர்க்க ஒரு பொது தீர்ப்பாயத்தை அமைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது குறித்த பேட்டி உள்ளிட்ட செய்திகளை கேட்கலாம்
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்
இன்று இந்திய பிரதமர் மோதியை சந்தித்த தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் தெரிவித்த கருத்து
உத்தரகாண்டில் இன்று திருவள்ளுவர் சிலை மீண்டும் இடம் மாற்றியமைக்கப்பட்ட சூழலில், அது குறித்து பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தருண் விஜய் அளித்த பேட்டி ஆகியவை கேட்கலாம்
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்
கருணாநிதியின் உடல் நலம் விசாரிக்க சென்ற வைகோ மீது நடந்த தாக்குதல் குறித்து கமிட்டி காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்த கருத்து
இலங்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்து ஆலயமொன்று சேதப்படுப்படுத்தப்பட்டது குறித்து கிழக்கு மாகாண அமைச்சர் துரை ராஜ சிங்கம் தெரிவித்த கருத்து ஆகியவை கேட்கலாம்
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையின்போது நடந்த உண்மை என்ன என்பது குறித்து அதிமுக செய்தித் தொடர்பாளர் பொன்னையன் பிபிசி தமிழுக்கு பேட்டி
இன்றைய தமிழோசையில், முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கத்தில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியை, காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் நலம் விசாரித்தது குறித்த செய்தி கருணாநிதியைப் பார்க்கச் சென்ற மதிமுக பொதுச் செயலரின் வாகனத்தை திமுகவினர் தாக்கியது குறித்த செய்தி சசிகலாவை அதிமுக பொதுச் செயலாளராக்க கட்சி விதிகள் திருத்தப்படும் என செய்தித் தொடர்பாளர் பொன்னையன் பேட்டி மற்றும் இலங்கைச் செய்திகளைக் கேட்கலாம்.
சீன தலைநகரான பெய்ஜிங்கில் நச்சுப்புகையின் அளவு மிக அதிகமாக இருப்பதால் ஐந்து நாள் அதி உயர் எச்சரிக்கையை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இந்த எச்சரிக்கை காரணமாக, அடுத்த ஐந்து நாட்கள் பெய்ஜிங்கில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட கார்கள், இயங்காமல் நிறுத்தி வைக்கப்பட வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகும். மேலும், பெருமளவு மாசு ஏற்படுத்தும் சில தொழிற்சாலைகள் மூடப்பட உள்ளன. வடகிழக்கு சீனாவில் உள்ள சுமார் 20 நகரங்களும் இதே போன்ற நச்சுப்புகை எச்சரிக்கைகளை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, இந்தப் பிரச்சனையை சமாளிக்க எந்தவித கூடுதல் முயற்சிகளும் எடுக்கப்படவில்லை என்ற விரக்தி பொதுமக்களிடம் பரவலாக உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் பெய்ஜிங் அதிகாரிகள் ஒரே ஒரு முறைதான் இதுபோன்று அதி உயர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த முடிவு பெரும்பாலும், பொதுமக்கள் பாதுகாப்பை விட, அரசியல் சார்ந்ததாகவே உள்ளதாக சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்த தகவல்கள்
சீனாவில் நச்சுப்புகையின் அளவு மிக அதிகமாக இருப்பதால் ஐந்து நாள் அதி உயர் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது குறித்த செய்தி ஆகியவை கேட்கலாம்.